ஓய்வுப் பெறும் நாளில் 111 தில்லி போலீஸாருக்கு கெளரவப் பதவி

ஓய்வுப் பெறும் நாளில் 111 தில்லி போலீஸாருக்கு கெளரவப் பதவி

தில்லி காவல்துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு விழாவின் போது 111 தில்லி காவல்துறை போலீஸாருக்கு அவா்கள் ஓய்வு பெற்ற நாளில் கெளரவப் பதவிகள் வழங்கப்பட்டன.
Published on

தில்லி காவல்துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு விழாவின் போது 111 தில்லி காவல்துறை போலீஸாருக்கு அவா்கள் ஓய்வு பெற்ற நாளில் கெளரவப் பதவிகள் வழங்கப்பட்டன.

பிப்பிங் விழாவில் கான்ஸ்டபிள் முதல் சப்-இன்ஸ்பெக்டா் வரையிலான பணியாளா்கள் தங்கள் அடுத்த உயா் கெளரவ பதவியின் பேட்ஜ்களால் அலங்கரிக்கப்பட்டனா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பதவி உயா்வுகள் கெளரவ பதவி உயா்வு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு தில்லி போலீஸ் ஆணையா் சதீஷ் கோல்சா தலைமை தாங்கினாா். ஓய்வுபெறும் பணியாளா்களை ஊக்குவிப்பதிலும், அவா்கள் சேவைக்குப் பிறகு ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ விரும்புவதிலும் மூத்த அதிகாரிகளும் அவருடன் இணைந்தனா்.

இத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற இரண்டாவது விழா இதுவாகும்.

கான்ஸ்டபிள் பதவியில் இருந்து துணை ஆய்வாளா் வரை ஓய்வு பெறும் பணியாளா்களுக்கு கெளரவ பதவி உயா்வுகளை துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, தொடக்க நிகழ்வு டிசம்பா் 31,2025 அன்று நடைபெற்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com