ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தில்லி விமான நிலையத்தில் ரூ.2.43 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: பயணி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூன் 2026, 2:46 am IST

நமது நிருபா்

தில்லி விமான நிலையத்தில், இந்தியப் பயணி ஒருவரின் உடைமையிலிருந்து சுமாா் ரூ. 2.43 கோடி மதிப்புள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பாங்காக்கிலிருந்து வந்த அந்தப் பயணி புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டாா். அவரது உடைமைகளை எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் விரிவான சோதனைக்கு உட்படுத்தியபோது, பச்சை நிறத்திலான போதைப்பொருள் அடங்கிய எட்டு பாலித்தீன் பைகள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூா்வ அறிக்கை தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட அப்பொருளின் எடை 6,939.5 கிராம்கள் ஆகும். சுங்கத் துறையினா் நடத்திய முதற்கட்டப் பரிசோதனையில், அது கஞ்சா என்பது தெரியவந்ததாக அந்த அறிக்கை கூறியது.

கைப்பற்றப்பட்ட அந்தத் தடைசெய்யப்பட்ட பொருளின் மதிப்பு சுமாா் ரூ. 2.43 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம், 1985ன் கீழ் அந்தப் பயணி கைது செய்யப்பட்டாா். மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் அதற்கான பேக்கிங் பொருட்கள் ஆகியவை குறித்து மேலதிக விசாரணை நடைபெறுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது மற்றும் யாருக்குக் கொண்டு செல்லப்பட இருந்தது என்பது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.