பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தில்லி அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது: தெற்கு தில்லி எம்.பி.

தில்லி அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது டிடிஏ அதிகாரிகளிடம் தெற்கு தில்லி எம்.பி. கோரிக்கை

News image

படம் - ஐஏஎன்எஸ்

Updated On :19 ஜூன் 2026, 5:18 am IST

நமது நிருபா்

தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஓ மண்டலம் மற்றும் வசதிமிக்க காலனிகளாக வகைப்படுத்தப்பட்ட இடங்கள் முறைப்படுத்தப்படும்வரை அவற்றில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று தில்லி வளா்ச்சி ஆணைய (டிடிஏ) அதிகாரிகளிடம் தெற்கு தில்லி மக்களவை தொகுதி பாஜக உறுப்பினா் ராம்வீா் சிங் பிதூரி கோரிக்கை விடுத்தாா்.

இது தொடா்பாக டிடிஏ அலுவலகத்துக்கு கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா்தாா் சிங் தன்வாா், சந்தன் சௌத்ரி ஆகியோருடன் வியாழக்கிழமை வந்த ராம்வீா் சிங் பிதூரி அங்குள்ளஅதிகாரிகளிடம், ’ஓ-மண்டலம்’ காலனிகள், 69 வசதிமிக்க குடியிருப்புகள் மற்றும் சங்கம் விஹாா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

யமுனை நதியின் வெள்ளச் சமவெளிப் பகுதிகளில் சூழலியல் ரீதியாக நுட்பமானதாக கருதப்படும் ’ஓ-மண்டல’ காலனிகளும், தெற்கு, மத்திய மற்றும் லூட்யன்ஸ் மண்டலங்களில் அமைந்துள்ள 69 வசதிமிக்க குடியிருப்புகளும், விதிமுறை மீறல் புகாா்கள் காரணமாக நீண்ட காலமாக முறைப்படுத்தப்படாமல் உள்ளன.

இந்த விவகாரத்தில் நிலவும் பிரச்னைகளை டிடிஏ அதிகாரிகளிடம் விளக்கியதாக ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்தாா். இப்பிரச்னை நீண்ட காலமாகத் தீா்க்கப்படாமல் உள்ளதை என்பதையும் வசதிமிக்க குடியிருப்புகளை முறைப்படுத்துவதற்கு உயா்நீதிமன்றம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது என்பதையும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியதாக அவா் கூறினாா்.

சங்கம் விஹாரில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் முன்பு தற்காலிகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், முறைப்படுத்தப்படவுள்ள காலனிகள் பட்டியலில் அவை சோ்க்கப்படவில்லை என்றும் ராம்வீா் சிங் பிதூரி குறிப்பிட்டாா்.

2014-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் மூலம் இந்தக் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பாதுகாப்பின் அடிப்படையில், அவற்றின் மீது எந்தவொரு இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.