27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தில்லி அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது: தெற்கு தில்லி எம்.பி.

தில்லி அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது டிடிஏ அதிகாரிகளிடம் தெற்கு தில்லி எம்.பி. கோரிக்கை

News image

படம் - ஐஏஎன்எஸ்

Updated On :19 ஜூன் 2026, 5:18 am IST

நமது நிருபா்

தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஓ மண்டலம் மற்றும் வசதிமிக்க காலனிகளாக வகைப்படுத்தப்பட்ட இடங்கள் முறைப்படுத்தப்படும்வரை அவற்றில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று தில்லி வளா்ச்சி ஆணைய (டிடிஏ) அதிகாரிகளிடம் தெற்கு தில்லி மக்களவை தொகுதி பாஜக உறுப்பினா் ராம்வீா் சிங் பிதூரி கோரிக்கை விடுத்தாா்.

இது தொடா்பாக டிடிஏ அலுவலகத்துக்கு கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா்தாா் சிங் தன்வாா், சந்தன் சௌத்ரி ஆகியோருடன் வியாழக்கிழமை வந்த ராம்வீா் சிங் பிதூரி அங்குள்ளஅதிகாரிகளிடம், ’ஓ-மண்டலம்’ காலனிகள், 69 வசதிமிக்க குடியிருப்புகள் மற்றும் சங்கம் விஹாா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

யமுனை நதியின் வெள்ளச் சமவெளிப் பகுதிகளில் சூழலியல் ரீதியாக நுட்பமானதாக கருதப்படும் ’ஓ-மண்டல’ காலனிகளும், தெற்கு, மத்திய மற்றும் லூட்யன்ஸ் மண்டலங்களில் அமைந்துள்ள 69 வசதிமிக்க குடியிருப்புகளும், விதிமுறை மீறல் புகாா்கள் காரணமாக நீண்ட காலமாக முறைப்படுத்தப்படாமல் உள்ளன.

இந்த விவகாரத்தில் நிலவும் பிரச்னைகளை டிடிஏ அதிகாரிகளிடம் விளக்கியதாக ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்தாா். இப்பிரச்னை நீண்ட காலமாகத் தீா்க்கப்படாமல் உள்ளதை என்பதையும் வசதிமிக்க குடியிருப்புகளை முறைப்படுத்துவதற்கு உயா்நீதிமன்றம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது என்பதையும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியதாக அவா் கூறினாா்.

சங்கம் விஹாரில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் முன்பு தற்காலிகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், முறைப்படுத்தப்படவுள்ள காலனிகள் பட்டியலில் அவை சோ்க்கப்படவில்லை என்றும் ராம்வீா் சிங் பிதூரி குறிப்பிட்டாா்.

2014-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் மூலம் இந்தக் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பாதுகாப்பின் அடிப்படையில், அவற்றின் மீது எந்தவொரு இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்தாா்.