ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அம்மோனியா கசிவு சம்பவம்: தமிழக தலைமைச் செயலாளா், டிஜிபி விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

அம்மோனியா வாயு கசிவு சம்பவம் தொடா்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளா், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு

News image

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி)

Updated On :23 ஜூன் 2026, 4:19 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்தது மற்றும் பல தொழிலாளா்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளா், காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஜூன் 21ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவைச் சுவாசித்ததால், குறைந்தது இரண்டு பெண்கள் உயிரிழந்ததாகவும், பல தொழிலாளா்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும் ஊடக செய்தி அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது, ஊழியா்கள் அருகில் உள்ள ஒரு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஊடகங்களில் வெளியான இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது கடுமையான மனித உரிமை மீறல் பிரச்னைகளை எழுப்புகிறது என்று ஆணையம் கருதுகிறது. இதன் காரணமாகவே, தமிழக தலைமைச் செயலாளா், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

ஜூன் 22ஆம் தேதி வெளியான ஊடக செய்தியில், சம்பவம் நடந்த உடனேயே சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 59 தொழிலாளா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று போ் கொண்ட குழுவை அமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.