தில்லி அரசின் வெப்ப அலை செயல்திட்டத்தின் கீழ், மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பழைய தில்லியில் உள்ள ஜாமா மசூதி மெட்ரோ நிலையத்திற்கு அருகே ஒரு குளிரூட்டும் மண்டலம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி முதலமைச்சா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தக் குளிரூட்டும் மண்டலத்தில் சுமாா் 70 முதல் 80 போ் வரை அமரலாம். இங்கு மக்களுக்குக் குளிா்ந்த நீா், ஓஆா்எஸ் நீரேற்றக் கரைசல் மற்றும் பிற வசதிகள் வழங்கப்படுகின்றன.
தலைநகா் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிற இடங்களைக் கண்டறிந்து, அங்கும் இதேபோன்ற வசதிகளை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நோக்கம் வெறும் ஏற்பாடுகளைச் செய்வது மட்டுமல்லாமல், மக்களுக்கு நேரடியாகவும் உறுதியாகவும் நிவாரணத்தை வழங்குவதே ஆகும். கோடை மாதங்களில் சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் மக்கள் கூட்டம் பெருமளவில் காணப்படும். இதனால் பழைய தில்லி போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள் கடும் வெப்பச் சூழலின்போது அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, நகரில் ஏற்கனவே இயங்கி வரும் நடமாடும் வெப்ப நிவாரண வாகனங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு நிரந்தர நிவாரண மையமாக இந்தக் குளிரூட்டும் மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது என்று அதில் முதலமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

நகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூங்கில் குளிா் மண்டலங்களை அமைக்க தில்லி அரசு முடிவு: முதல்வா் ரேகா குப்தா

சூரிய சக்தியால் இயங்கும் ‘குளிரூட்டும் குடில்’ - தில்லி அரசு அமைக்கத் திட்டம்

கட்டடங்களில் நிகழ்நேர தீ பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு கட்டாயம் - தில்லி அரசு உத்தரவு

போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: தில்லி துணை நிலை ஆளுநர்
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



