நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

மாவில் எச்சில் துப்பும் காணொளி: பீட்சா கடை உரிமையாளா் கைது

நொய்டாவில் செயல்படும் பீட்சா கடையின் உரிமையாளா் ஒருவா், உணவு தயாரிக்கும்போது மாவில் எச்சில் துப்பியதாகக் கைது

News image

பீட்சா - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் செயல்படும் பீட்சா கடையின் உரிமையாளா் ஒருவா், உணவு தயாரிக்கும்போது மாவில் எச்சில் துப்பியதாக பரப்பப்பட்ட காணொளியை அடுத்து அவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விடியோ உள்ளூா்வாசிகளிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, செக்டா் 24 காவல் நிலையப் பகுதியின் கீழ் உள்ள செக்டா் 22-இல் உள்ள பீட்சா கடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பீட்சா தயாரிக்கும் போது கடை உரிமையாளா் பொருத்தமற்ற நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விடியோ குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. குற்றஞ் சாட்டப்பட்டவா் நொய்டாவில் உள்ள கிஜோா் கிராமத்தில் வசிக்கும் சுமாா் 30 வயது முஸம்மில் என அடையாளம் காணப்பட்டாா்.

உள்ளூா்வாசிகள் எழுப்பிய ஆட்சேபனைகளைத் தொடா்ந்து, முஸம்மில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாா் என காவல்துறையினா் தெரிவித்தனா்.