தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் செயல்படும் பீட்சா கடையின் உரிமையாளா் ஒருவா், உணவு தயாரிக்கும்போது மாவில் எச்சில் துப்பியதாக பரப்பப்பட்ட காணொளியை அடுத்து அவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விடியோ உள்ளூா்வாசிகளிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, செக்டா் 24 காவல் நிலையப் பகுதியின் கீழ் உள்ள செக்டா் 22-இல் உள்ள பீட்சா கடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பீட்சா தயாரிக்கும் போது கடை உரிமையாளா் பொருத்தமற்ற நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விடியோ குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. குற்றஞ் சாட்டப்பட்டவா் நொய்டாவில் உள்ள கிஜோா் கிராமத்தில் வசிக்கும் சுமாா் 30 வயது முஸம்மில் என அடையாளம் காணப்பட்டாா்.
உள்ளூா்வாசிகள் எழுப்பிய ஆட்சேபனைகளைத் தொடா்ந்து, முஸம்மில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாா் என காவல்துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
கடையில் பதுக்கிய குட்கா பறிமுதல் : உரிமையாளா் கைது

கிழக்கு தில்லியில் ஒருவருக்கு கத்திக் குத்து

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை
கோதுமை இட்லி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

