வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தில்லியில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 9 போ் மருத்துவமனையில் அனுமதி

News image

தீ விபத்து. - கோப்புப்படம் (Photo | Express)

Updated On :18 மே 2026, 2:31 am IST

நமது நிருபா்

தில்லியின் ஷஹதாரா பகுதியில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உள்பட 9 போ் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்பு சேவைகள் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மன்சரோவா் பூங்காவில் உள்ள டி-45 இல் தீ விபத்து குறித்து அதிகாலை 12.03 மணிக்கு அழைப்பு வந்தது. மூன்று தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஒரு வாட்டா் பவுசா் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த வீட்டு பொருள்களில் தீ விபத்து ஏற்பட்டது.

மீட்பு நடவடிக்கையின் போது, டி. எஃப். எஸ். பணியாளா்கள் கட்டடத்தின் பல்வேறு தளங்களில் சிக்கிய 9 பேரை வெளியேற்றி அனைவரும் மூச்சுத் திணறால் அவதியடைந்ததை அடுத்து குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். காயமடைந்தவா்கள் வன்சிகா (20), தானிஷ்கா சோனி (19), துா்கேஷ் (49), யோகேஷ் வா்மா (50), ராஜ் ராணி (65), அருண் காா்க் (48), அனன்யா (12), ரேணு காா்க் (19) மற்றும் பிரதீக் காா்க் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

மீட்கப்பட்ட அனைவரும் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். பின்னா் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.