இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் சடலமாக மீட்பு: காவல் துறை விசாரணை

Updated On :18 மே 2026, 5:12 am IST

தில்லி அமன் விஹாா் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 22 வயது இளைஞா் சடலமாக மீட்கப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்த நபா் சுல்தான்புரி பகுதியைச் சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இது தொடா்பாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினா் விசாரணையை தொடங்கினா்.

உடற்கூறாய்வுக்கு அவரது உடல் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடா்பாக மறுவாழ்வு மையத்தின் ஊழியா்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.