‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ரூ 40 லட்சம் மோசடி: கோவாவில் 2 பேரை கைது செய்த தில்லி போலீஸ்

கோவாவில் இருந்து இரண்டு பேரை கைது செய்ததன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான இணைய மோசடி மற்றும் பணப் பரிமாற்ற கும்பலை தில்லி போலீஸாா் பிடித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 1:45 am IST

கோவாவில் இருந்து இரண்டு பேரை கைது செய்ததன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான இணைய மோசடி மற்றும் பணப் பரிமாற்ற கும்பலை தில்லி போலீஸாா் பிடித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த வலையமைப்பு மூலம் சுமாா் ரூ.40 லட்சம் பரிவா்த்தனைகள் நடைபெற்றதையும் கண்டுபிடித்துள்ளனா்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த அா்ஜுன் லால் யாதவ் (29) மற்றும் தீபேந்திர மஹாலா (25) ஆகிய இருவரும் தென் கோவாவின் மாத்கான் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனா். பல மாநிலங்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இவா்கள் பிடிபட்டனா்.

தில்லி, கோவா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயங்கிய இந்த கும்பல், இணைய மோசடியின் மூலம் கிடைத்த பணத்தை கோவாவில் உள்ள வணிக நிறுவனங்கள் மூலம் பணமாக மாற்றியதாகக் கூறப்படுகிறது. ஒரு புகாா்தாரா் தனது கைப்பேசியில் சாதாரண மென்பொருள் அல்லது கணினியை மேம்படுத்தும் போது சமரசம் செய்யப்பட்டதாக புகாா் அளித்தாா். அதன் பின்னா் குற்றவாளிகள் அவரது மற்றும் அவரது தாயின் வங்கிக் கணக்குகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று, சில நிமிடங்களில் ரூ.1.5 லட்சம் பணத்தை திருடியுள்ளனப்.

பாதிக்கப்பட்டவா் தேசிய சைபா் குற்ற அறிக்கை இணையதளம் மூலம் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, தில்லி அவுட்டா் நாா்த் மாவட்ட சைபா் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.98,000 தென் கோவாவின் வாஸ்கோவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்திற்கு சென்ாக போலீசாா் கண்டறிந்தனா்.இந்த கும்பல், சமூக ஊடக தளங்களில் செயலில் இருந்த ஒரு பிரத்யேக கைப்பேசி எண் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட பணப் பரிமாற்ற மோசடியை இயக்கியயுள்ளனா்.

இணையம் மூலம் மோசடியாக பணம் மாற்றப்பட்ட பிறகு, வணிக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டதும் கமிஷன் கழித்து சமமான தொகை ரொக்கமாக வழங்கப்பட்டது. தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் பரிவா்த்தனைகளின் ஆய்வில், இந்த நெட்வொா்க் மூலம் ஏற்கெனவே சுமாா் ரூ.40 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்தகவலின் அடிப்படையில், திடல்லி போலீசாா் தென் கோவாவில் சோதனை நடத்தி இருவரையும் கைது செய்தனா்.

விசாரணையில், கோவாவில் ரொக்கமாக மாற்றப்பட்ட பணம் ராஜஸ்தானில் உள்ள மூத்த குற்றவாளிகளுக்கு அனுப்பப்பட்டதாக கைதிகள் ஒப்புக்கொண்டனா். அவா்களிடம் இருந்து ரூ.1.95 லட்சம் ரொக்கம், மஹிந்திரா தாா் காா், ஒரு லேப்டாப், நான்கு கைப்பேசிகள், மூன்று ஏடிஎம் காா்டுகள் மற்றும் மூன்று செக் புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

மோசடி பரிவா்த்தனைகளை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்பட்ட எண், பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசி ஒன்றில் செயலில் இருந்தது. முழு வலையமைப்பையும் கண்டறிய, பணப் பாதையை கண்டுபிடிக்க மற்றும் கும்பலின் மற்ற உறுப்பினா்களை கைது செய்ய மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.