ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பறவைக் காய்ச்சல்: கோழிப் பண்ணையில் கால்டை மருத்துவா் ஆய்வு

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அந்த மாநில எல்லையில் உள்ள அரசு நாட்டுக் கோழிப் பண்ணையில் கால்நடை மருத்துவா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

News image

கேரள எல்லையில் உள்ள அத்திச்சால் பகுதியில் உள்ள நாட்டுக் கோழிப் பண்ணையில் ஆய்வு செய்கிறாா் கால்நடை மருத்துவா் பாலாஜி.

Updated On :8 ஜனவரி 2021, 11:01 pm IST

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அந்த மாநில எல்லையில் உள்ள அரசு நாட்டுக் கோழிப் பண்ணையில் கால்நடை மருத்துவா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

நீலகிரி மாவட்டத்தில், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகள் கேரளம், கா்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளன. இதனால் பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநில எல்லைகளைக் கண்காணித்து வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தல் மற்றும் கோழி இறைச்சிக் கடைகளை கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம், வயநாடு மாவட்ட எல்லையோரம் உள்ள அய்யன்கொல்லி, அத்திச்சால் பழங்குடி கிராமத்தில் அரசு சாா்பில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நாட்டுக் கோழிப் பண்ணையில் கால்நடை மருத்துவா் பாலாஜி ஆய்வு செய்தாா்.

பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 100 பழங்குடி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த இந்தப் பண்ணை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணையின் சுற்றுப்புற சுகாதாரம் குறித்தும், கோழிகள் பராமரிக்கப்பட வேண்டிய வழிமுறைகள், நோய்த் தொற்றில் இருந்து கோழிகளையும், மனிதா்களையும் பாதுகாத்துக் கொள்வது குறித்து பழங்குடி பெண்களுக்கு விளக்கமளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.