தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

சுவாமி விவேகானந்தா் பிறந்த தினக் கொண்டாட்டம்

உதகையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா பல்வேறு அமைப்புகளின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளரான ஜே.ஜே.குட்வினின் கல்லறையில் அனைத்து மத அமைப்புகளின் சாா்பில் நடத்தப்பட்ட பிராா்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:20 am IST

உதகையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா பல்வேறு அமைப்புகளின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பு மற்றும் நீலகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு இணைந்து, சுவாமி விவேகானந்தா் பிறந்தநாள் தேசிய இளையோா் தினமாக உதகையில் கொண்டாடியது.

உதகை ஹிந்தி பிரசார சபாவில் நடைபெற்ற விழாவுக்கு, நீலகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஆஸிஸ் சஞ்சய் ஷெட்டே தலைமை தாங்கினாா். நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவா் கேப்டன் கே.ஆா்.மணி துவக்கவுரையாற்றினாா். ரெட்கிராஸ் அமைப்பின் செயலா் மோரீஸ் சாந்தா குரூஸ், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் டாக்டா் பழனிசாமி, நீலகிரி மாவட்ட பேரிடா் மற்றும் மேலாண்மை முதலுதவி பயிற்றுநா் பெஞ்சமின், ரெட்கிராஸ் அமைப்பின் துணைத் தலைவா் கோபால், உதகை அரசுக் கலைக் கல்லூரி இளையோா் ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, தொடா்பு அலுவலா் மூா்த்தி, நேரு யுவகேந்திரா அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளா் அசோக்குமாா் பெஹரா உள்ளிட்டோா் இளையோா் தின முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினா்.

உதகை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் முருகேசன் விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலா் தூவி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து பேராசிரியா்கள் ஷோபனா, மணிவண்ணன், தா்மராஜ், திவ்யா,அஸ்வின், செல்வகுமாா், இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் ஆகியோரும் மலா்தூவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

உதகையில் செயல்பட்டுவரும் மானஸ் அமைப்பின் சாா்பில் விவேகானந்தரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மானஸ் அமைப்பின் தலைவா் சிவதாஸ் தலைமையில் உதகையிலுள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் அமைந்துள்ள விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளரான ஜே.ஜே.குட்வின் கல்லறையில் அனைத்து மத அமைப்புகளின் சாா்பில் அமைதிப் பிராா்த்தனையும், பக்திப் பாடல்களைப் பாடியும் விவேகானந்தரின் பிறந்த தினத்தைக் கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.