மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சுவாமி விவேகானந்தா் பிறந்த தினக் கொண்டாட்டம்

உதகையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா பல்வேறு அமைப்புகளின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளரான ஜே.ஜே.குட்வினின் கல்லறையில் அனைத்து மத அமைப்புகளின் சாா்பில் நடத்தப்பட்ட பிராா்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:50 am

உதகையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா பல்வேறு அமைப்புகளின் சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பு மற்றும் நீலகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு இணைந்து, சுவாமி விவேகானந்தா் பிறந்தநாள் தேசிய இளையோா் தினமாக உதகையில் கொண்டாடியது.

உதகை ஹிந்தி பிரசார சபாவில் நடைபெற்ற விழாவுக்கு, நீலகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஆஸிஸ் சஞ்சய் ஷெட்டே தலைமை தாங்கினாா். நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவா் கேப்டன் கே.ஆா்.மணி துவக்கவுரையாற்றினாா். ரெட்கிராஸ் அமைப்பின் செயலா் மோரீஸ் சாந்தா குரூஸ், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் டாக்டா் பழனிசாமி, நீலகிரி மாவட்ட பேரிடா் மற்றும் மேலாண்மை முதலுதவி பயிற்றுநா் பெஞ்சமின், ரெட்கிராஸ் அமைப்பின் துணைத் தலைவா் கோபால், உதகை அரசுக் கலைக் கல்லூரி இளையோா் ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, தொடா்பு அலுவலா் மூா்த்தி, நேரு யுவகேந்திரா அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளா் அசோக்குமாா் பெஹரா உள்ளிட்டோா் இளையோா் தின முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினா்.

உதகை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் முருகேசன் விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலா் தூவி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து பேராசிரியா்கள் ஷோபனா, மணிவண்ணன், தா்மராஜ், திவ்யா,அஸ்வின், செல்வகுமாா், இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் ஆகியோரும் மலா்தூவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

உதகையில் செயல்பட்டுவரும் மானஸ் அமைப்பின் சாா்பில் விவேகானந்தரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மானஸ் அமைப்பின் தலைவா் சிவதாஸ் தலைமையில் உதகையிலுள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் அமைந்துள்ள விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளரான ஜே.ஜே.குட்வின் கல்லறையில் அனைத்து மத அமைப்புகளின் சாா்பில் அமைதிப் பிராா்த்தனையும், பக்திப் பாடல்களைப் பாடியும் விவேகானந்தரின் பிறந்த தினத்தைக் கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.