தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

கிண்ணக்கொரை சாலையில் விழுந்த பாறைகள் அகற்றம்

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்த பாறைகளை இரவோடு இரவாக நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.

News image

சாலையில் விழுந்து கிடந்த பாறைகள்.

Updated On :15 ஜனவரி 2021, 5:34 pm

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்த பாறைகளை இரவோடு இரவாக நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக சாரல் மழையும், கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில், மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை முனீஸ்வரா் கோயில் அருகே மண் சரிவும், பெரிய பாறைகளும், மண் திட்டுக்களும் இடிந்து சாலையில் வியாழக்கிழமை விழுந்தன. இதன் காரணமாக இரியசீகை, அண்ணா நகா் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.

இது குறித்து வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சாலையில் விழுந்து கிடந்த பாறைகளையும், மண் குவியல்களையும் இரவவோடு இரவாக நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.