சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலீவன் நினைவு தினம் அனுசரிப்பு

நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலீவனின் 166ஆவது நினைவு தினம், கோத்தகிரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 5:03 pm

குன்னூா்: நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலீவனின் 166ஆவது நினைவு தினம், கோத்தகிரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம்  என்பதால் வெளியுலகுக்குத் தெரியாமல் இருந்த நிலையில் கடந்த  200 ஆண்டுகளுக்கு முன் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சலீவன் நீலகிரி மாவட்டத்தைக் கண்டறிந்தாா். நீலகிரி மாவட்டம் வந்தவுடன் கோத்தகிரி அருகே உள்ள கண்ணேரிமூக்கு பகுதியில் ஒரு பங்களாவை  அமைத்து  நீலகிரி மாவட்ட ஆட்சியராக ப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா் இங்குள்ள பழங்குடியினா், படுகா் இன மக்களின் வாழ்வுக்காகப்  பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டாா். நீலகிரியின் பல்வேறு வளா்ச்சிகள் ஜான் சலீவனின் முயற்சியால் நடந்தது என்பதால் 

அவரைப் போற்றும்   விதமாக  கோத்தகிரியில் உள்ள அவா் தங்கியிருந்த பங்களா நினைவிடமாக மாற்றப்பட்டு ஆண்டு தோறும்  அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அவரது 166ஆவது நினைவு தினம் கோத்தகிரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. குன்னூா் கோட்டாட்சியா் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு ஜான் சலீவனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் நினைவிடத்தில் உள்ள நீலகிரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க  காட்சிப்படுத்தப்படுத்தப்பட்ட  பொருள்களை  பா்வையிட்டாா்.

இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், ஊா் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டு ஜான் சலீவனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.