மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புறநானூறு பதிப்பு வரலாறு

புறநானூறு பதிப்பு வரலாறு (1894-2010) - முனைவர் அ.செல்வரசு; பக்.256; ரூ.200; காவ்யா, சென்னை-24; )044-2372 6882. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களின் பதிப்பு வர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:10 am

முனைவர் அ. செல்வராசு

புறநானூறு பதிப்பு வரலாறு (1894-2010) - முனைவர் அ.செல்வரசு; பக்.256; ரூ.200; காவ்யா, சென்னை-24; )044-2372 6882.

நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களின் பதிப்பு வரலாறு 2010-ஆம் ஆண்டு பதிப்பாக முன்பே வெளிவந்திருக்கிறது. இவ்வாண்டின் புதிய பதிப்பு வரவு இந்நூல்.

சிறப்பு வாய்ந்த புறநானூறு உ.வே.சா.(1894) தொடங்கி, இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டிருப்பினும், அதிகாரப்பூர்வமான பதிப்புகள் வெளிவரவில்லை என்றும், அவ்வாறான பதிப்பு எதிர்காலத்தில் வெளிவரும் நிலையில் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்றியமையாத சில சிந்தனைகளைப் பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர். ஒரே நூலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சுவடிகள் கிடைக்கப்பெற்ற நிலையில், பாட வேறுபாடுகளைத் (பாடபேதம்) தவிர்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

"அவ்வாறு உள்ள பாடபேதங்களை உ.வே.சா. குறிப்பிட்டிருக்கிறார். புறநானூற்றுக்கு உரை எழுதியவர்கள் பெரும்பாலும், பாட பேதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உரை எழுதியவர்கள் மூலப்பாடல் எந்தப் பதிப்பை அல்லது யாருடைய பதிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டால்தான் அது பதிப்பு நேர்மையாக இருக்கும்' என்று நூலாசிரியர் முன்வைக்கும் இந்த யோசனைகளை ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதுபோன்ற பதிப்பு வரலாறுகள் சங்க இலக்கியங்கள் அனைத்துக்கும் வெளிவந்தால்தான் நாம் சென்ற நூற்றாண்டின் பண்டைத் தமிழர்கள் பற்றியும், கல்வி முறை பற்றியும் அறிந்து கொள்ள முடியும். இவ்விதமான பதிப்பு வரலாறுகள்தாம் ஆவணங்களாகப் போற்றப்படும். "புறநானூறு' தொடர்பாக நூலாசிரியரின் "தேடுதல்' வேட்டையில் உருவான இந்நூல் அவருக்கு மட்டுமல்ல, தமிழிலக்கியத்துக்குக் கிடைத்த ஒரு புதையல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.