மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள் - கொ.மா. கோதண்டம்; பக்.620; ரூ.600; காவ்யா வெளியீடு, சென்னை- 24. )044 - 2372 6882.

News image
Updated On :26 மார்ச் 2017, 7:09 pm

கொ.மா.கோதண்டம்

கொ.மா.கோதண்டம் நாவல்கள் - கொ.மா. கோதண்டம்; பக்.620; ரூ.600; காவ்யா வெளியீடு, சென்னை- 24. ) 044 - 2372 6882.
மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நூலாசிரியர் எழுதிய மூன்று நாவல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. படிக்க எடுத்தால் பாத்திரங்களோடு ஒன்றிப் போகும் அளவுக்கு இயல்பான சித்திரிப்புகளுடன் அமைந்திருப்பது இத் தொகுப்பில் உள்ள நாவல்களின் பலம்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை கசப்பானது. அடிப்படை வசதிகள் என்றால் என்னவென்றே அறியாத அந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை காதல் உணர்வுகளுடன் இணைத்துத் தருவது "ஏலச் சிகரம்'. இரண்டாம் நாவலான "குறிஞ்சாம் பூ', விருதுநகர் மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் வாழும் மனிதர்கள் குறித்து பேசுகிறது. அந்த மக்கள் அதிகாரிகளால் படும் துயரங்கள் குறித்து இந்த நாவல் பேசுகிறது.
தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் இலங்கையில் ஒடுக்கப்படுவது, சொந்த நாட்டிலோ அகதிகளாகப் பார்க்கப்படுவது ஆகியவற்றைச் சித்திரிக்கிறது "ஜன்ம பூமிகள்' நாவல். இந்த நாவலுக்காக இலங்கைக்குச் சென்று அங்கு தான் பெற்ற அனுபவங்களை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை, அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை அற்புதமாகச் சித்திரிக்கும் நாவல்களின் சிறந்த தொகுப்பு இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.