தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும்

News image
Updated On :4 ஏப்ரல் 2022, 4:24 am

DIN

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும் - மூலம்: யொஹான் வோல்ப்கங்க் பான் கோதெ - தமிழில்: சுஜாதா ராஜகோபால்; பக். 48; ரூ.80; கார் முகில் எஜூகேஷனல் டிரஸ்ட், முகில் கார்டன்ஸ், டி.புதுப்பட்டி - 624704, திருமங்கலம் தாலுகா, மதுரை. 

ஜெர்மன் கவிஞர் ஷில்லெர் 'ஹோரன்' எனும் பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களில் தத்துவ ரீதியாக உள்ள கருத்துகளை மையப்படுத்தி உயிரோட்டமுள்ள கதையாக ஜெர்மானிய பன்முக ஆளுமை 'கோதெ'வால் எழுதப்பட்டதுதான் இந்நூல். 

ஓர் உன்னதமான இலட்சிய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை பஞ்சதந்திர வகைமையிலான கதை சொல்லும் பாணியில் எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு.
இந்தக் கதையில் வரும் பித்தளை, வெள்ளி, தங்கத்திலான மூன்று மன்னர்கள் ஆன்மாவின் மூன்று சக்திகளைக் குறிக்கின்றனர். பித்தளை மன்னர் உடல் - மன சக்தி; வெள்ளி மன்னர் தயாளம் - தெய்வ பக்தி; தங்க மன்னர் விவேகத்தையும் குறியீடாக வெளிப்படுத்துகின்றனர். சக்தி, காரியம் செய்யும் ஆற்றல், விவேகமுள்ள புத்தி இது மூன்றும் மனிதனை உன்னத 
நிலைக்கு எடுத்துச் செல்லும். இவற்றை இந்தக் கதையில் வரும் இளைஞன் அந்த மூன்று மன்னர்களிடம் இருந்து பெறுகிறான். 

இக்கதையில் வரும் முதியவர் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது. 

தனியொருவனால் உதவி செய்ய முடியாது. மாறாக, யாரால் சரியான நேரத்தில் பலரை ஒருங்கிணைத்து செயல்பட முடியுமோ, அவரால் உதவ முடியும் எனும் முதியவரின் கூற்று கதையின் ஓட்டத்திலும் சரி, தனி மனித வாழ்க்கையிலும் சரி எக்காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளன. 

ஒரு நாட்டில் வாழ்பவர்களும், அந்நாட்டுக்கு வருபவர்களும் அங்குள்ள சட்டதிட்டங்களின் படி நடக்க வேண்டும். தெரியாது என்று கூறி தப்பிக்க முடியாது என்பதை படகோட்டி மூலம் காட்சியாக விளக்கப்பட்டுள்ளது. 

இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இக்கதையில் வரும் கருத்துகள் தற்காலத்துக்கும் பொருத்தமாக இருப்பது இந்நூலின் சிறப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.