தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சித்தர்களின் மனிதச் சார்பியல் கொள்கை

சித்தர்களின் மனிதச் சார்பியல் கொள்கை - குருதேவ் முத்துக்கொத்தள மாரியப்ப செல்வராஜ்; பக். 378; ரூ.300; நர்மதா பதிப்பகம்,  சென்னை - 600 017;  98409 32566

News image
Updated On :10 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சித்தர்களின் மனிதச் சார்பியல் கொள்கை - குருதேவ் முத்துக்கொத்தள மாரியப்ப செல்வராஜ்; பக். 378; ரூ.300; நர்மதா பதிப்பகம்,  சென்னை - 600 017;  98409 32566

இன்றைய நவீன அறிவியலின் அடிப்படைக் கோட்பாடாக அமைந்தது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு. ஆற்றலின் மதிப்பை அளவிட உதவும் இயற்பியல் கொள்கையான பொது சார்பியல் கோட்பாடு, பொருளின் நிறையையும் ஒளிவேகத்தின் இருமடங்கையும் பெருக்கினால் கிடைப்பதே ஆற்றலின் மதிப்பு என்று அளவிடுகிறது. இதை சுருக்கமாக  E = mc2   என்ற சூத்திரமாக எழுதுவது வழக்கம். இது ஒரு வடிவியல் கணிதச் சமன்பாடாகும். அண்டத் தோற்றத்தை விளக்கும் அறிவியல் கொள்கையாக இச்சமன்பாடு அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகச் சிறிய துகளாலும்கூட  மிகப் பெரும் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் கண்டறிந்தார்.

பிரபஞ்சத்தின் போக்கை ஆராயும் விஞ்ஞானிகள், இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் உயிர்களின் அசைவுக்குள்ளும் அதன் ஆற்றல்கள் விளங்குகின்றன என்பதைக் கவனிப்பதில்லை என்கிறார் இந்நூலாசிரியர். இதனை உணராததாலேயே, ஐன்ஸ்டீனின் கோட்பாடு அணுகுண்டு தயாரிப்புக்கு உதவுவதில் முடிந்திருக்கிறது என்கிறார் இவர். 

அவ்வாறு விஞ்ஞானிகள் ஆராய மறந்ததையே, மெய்ஞானிகளான சித்தர்கள் தமது உடலையே ஆய்வகமாக்கிக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கண்டறிந்த மூவா மருந்துதான் மூச்சுப் பயிற்சி என்னும் சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் யோகக்கலை. இது ஓர் உடலியல் சார்ந்த அறிவியல் என்று கூறும்  முமாசெ, உடலியல், உளவியல், அண்டவியல் கொள்கைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஆராய்ந்து இந்நூலை எழுதி இருக்கிறார். தனது ஆய்வுக்கு உதவியாக விஞ்ஞானிகளின் ஆங்கிலச் சொற்களை எடுத்தாளும் நூலாசிரியர் அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்க் கலைச்சொற்களையும் உருவாக்கி இருக்கிறார்.

உணவு முறை, சுய ஒழுக்கம், மூச்சுக்கலை ஆகியவற்றால் உடலைக் கட்டுக்குள் வைப்பவரின் மனம் கட்டுப்பாட்டில் இருக்கும். அவற்றின் பெருக்கத்தால் ஆற்றல் கைவசமாகும் என்பதே இந்நூலின்கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.