ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

DIN

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு - சி.சரவண கார்த்திகேயன்; பக். 912; ரூ.1000; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14. 044-42009603

சோழப் பேரரசின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு, சுமார் 1000 வருடங்களுக்கு  முன்பு இளவரசன் ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்ற கேள்விக்கான விடையைத் துப்பறியும் புனைவு இது. 

சேவூர் போரில் வீரபாண்டியனை தலைகொய்து கொன்ற ஆதித்த கரிகாலனை பழிதீர்ப்பதற்கு காத்திருக்கும் பாண்டிய ஆபத்துதவி பரமேஸ்வரன் சகோதரர்கள்; ஆடலரசி ஸிதாரை மீது காதல், பரத்தையர் மீதுள்ள மோகத்தால் தனது மகள் பெருந்தேவியைத் தவிர்த்த கரிகாலன் மீது வன்மத்தில் இருக்கும் பழுவேட்டரையர்; பேரரசர் சுந்தர சோழருக்குப் பிறகு மணி மகுடத்தை கைப்பற்றியே தீருவது என்ற வேட்கையுடன் இருக்கும் மதுராந்தகர், குந்தவை - வந்தியத்தேவன் - ஆகியோர் கரிகாலனைக் கொல்லத் திட்டம் தீட்டுகின்றனர்.

சோழத்தின் தலைசிறந்த ஒற்றர்களான சாண்டில்யன், கல்கி  (அந்தப் பெயர்களைத் தவிர்த்திருக்கலாம்) ஆகியோர் துப்பறிந்து கிடைத்த தகவலின்படி,  அவையெல்லாம் கொலை முயற்சியாகத்தான் இருக்கிறதே தவிர கொலையாளி மேற்கண்ட யாருமல்ல.

கரிகாலனைக் கொலை செய்தது யார்?,  சோழ அரசியலில் அவரது முக்கியத்துவம் என்ன?, கொலைக்கான காரணம் என்ன? என்கிற கேள்விகளுக்கான விடைகளை இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் வடித்துள்ளார் நூலாசிரியர்.  புனைவு என்றே எண்ண முடியாத அளவுக்கு சுவாரஸ்யம் குறையாமல் காட்சிகள் நிஜத்தில் இருப்பதுபோல படைத்திருப்பது நூலாசிரியரின் நீண்ட கால உழைப்பை எடுத்தியம்புகிறது.

பிற்காலச் சோழர்கள் வரலாறு என்பது கல்வெட்டு, செப்பேடுகள் வழியே நமக்கு கிடைக்கும் தர்க்கபூர்வ ஊகங்கள் மட்டுமே. இதனால் சோழ வரலாற்றில், குறிப்பாக கரிகாலனின் கொலையில் எங்கெல்லாம் புனைவுகளை இட்டு நிரப்ப முடியுமோ அங்கெல்லாம் புனைவுகள் தாராளமாகக் கையாளப்பட்டுள்ளன. 

அதேநேரத்தில்,   திராவிடம், பிராமண ஆதிக்கம், சமூக நீதி குறித்து பேசுவது நூலாசிரியரின் தனிப்பட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது சற்றுத் தொய்வையும் ஏற்படுத்துகிறது. தேவையற்ற இடைச்செருகல் வலிந்து நுழைக்கப்படும் பரப்புரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.