ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியல் நெறிகள்

News image
Updated On :21 நவம்பர் 2022, 5:23 pm

DIN

சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியல் நெறிகள் - ப.பாலசுப்பிரமணியன்;  பக்.176; ரூ.200, அழகு பதிப்பகம், சென்னை-49; 044 2650 2086.

சங்க கால தமிழ் இலக்கியங்கள் வழியாக மனித இனத்துக்கு வழங்கிய செறிவார்ந்த வாழ்வியல் நெறிகளின் சுருக்கமான தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பதினெண் மேல் கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்களிலிருந்து அகம், புறம்சார் அறவியல் கருத்துகள் நூலில் விதைக்கப்பட்டுள்ளன.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... குறள் மூலம் அனைத்து உயிர்களும் சமமே என்றும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்..' பாடல் மூலம் உலக மக்கள் யாவரும் உறவினரே  என்ற சமத்துவம்- சகோதரத்துவத்தை உலகுக்கு முதலில் உரத்துச் சொன்னது தமிழ் இலக்கியங்களே. ஆடம்பரம் பெருகிவிட்ட இன்றைய நாகரிக, அவசர உலகில் "உண்பது நாழி, உடுப்பவை இரண்டே..' என்ற சிந்தனை தனிமனித வாழ்வை சிக்கனத்துடன் நிதானித்து நடைபோட வைக்கிறது.

பண்டைத் தமிழர்கள் வாழ்வியலாக கடைப்பிடித்தொழுகிய வாய்மை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, புறங்கூறாமை, இன்னா செய்யாமை, ஈகை, விருந்தோம்பல், இல்லற மாண்பு போன்ற அறம்சார் நெறிகளிலிருந்து மனித வாழ்வு வழுவிச் செல்லலாகாது என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அழுத்தமாக நிறுவுகிறார் நூலாசிரியர்.

ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க குடவோலை முறை பழக்கத்தில் இருந்தது என்பது அகநானூறு வழி தெரிகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் செவ்வியல் சமுதாயமாக ஏற்கப்படும் சங்க கால சமுதாயத்தின் அறங்களில் பல இக் கால சமுதாயத்துக்கும் அவசியத் தேவை என்பதை முன்னிறுத்தும் இந்நூல் கூடுதல் கவனம் பெறுகிறது. வீட்டு அலமாரிகளில் இடம் பெற வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.