ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சின்ன மறவர் சீமை சீர்மிகு சிவகங்கைச் சீமை

சின்ன மறவர் சீமை சீர்மிகு சிவகங்கைச் சீமை - டாக்டர் எஸ்.எம். கமால்; பக். 352; ரூ. 370, காவ்யா, சென்னை - 24; 044-23726882. 

News image
Updated On :21 நவம்பர் 2022, 8:18 am

DIN

சின்ன மறவர் சீமை சீர்மிகு சிவகங்கைச் சீமை - டாக்டர் எஸ்.எம். கமால்; பக். 352; ரூ. 370, காவ்யா, சென்னை - 24; 044-23726882. 

சிவகங்கைச் சீமையின் வரலாற்றுத் தகவல்கள், நாட்டுப் பாடல்களைக் கொண்டு பல  நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் உண்மைகளையும் கற்பிதங்களையும் பிரித்தறிய முடியாத சூழ்நிலையில்,  உறுதிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சிவகங்கைச் சீமை பற்றிய வரலாற்றைச் சிறப்பாக விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் எஸ்.எம்.கமால்.

சேதுபதிகள், மறவர்கள் வரலாறு தொடர்பான ஆய்வுகளில் வல்லுநரான நூலாசிரியர், சிவகங்கைச் சீமையைச் சுற்றி மருது சகோதரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களைத் 
தவறெனச் சான்றுகளுடன் நிராகரிக்கிறார்; ஆங்கிலேயர்களின் குறிப்புகளை எடுத்தாள்வதில் என்ன தவறென்றும் வினா எழுப்புகிறார். 

முதல் மன்னர்  சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் தொடங்கி, இடையில் முத்துவடுகநாதர், வேலு நாச்சியார், வெள்ளை நாச்சியார் எனக் கடைசி மன்னர் விசயரகுநாத பெரிய உடையாத் தேவர் வரையிலான வரலாற்றுச் சம்பவங்கள் கோவையாக விவரிக்கப்படுகின்றன. இவற்றுக்கிடையிலேயே  அதிகார மோதல்கள், மாற்றங்கள், சமாதானங்கள் பற்றியும்  குறிப்பிடப்படுகின்றன.  மன்னர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட செப்பேடுகளின் விவரங்களும்  நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிவகங்கைச் சீமை பற்றிச் சில நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள சீமை பற்றிய குறிப்பிட்ட தகவல்களை எடுத்துக்கொண்டு, எந்தவிதத்தில் அவை தவறானவை என்று ஒவ்வொன்றாக விளக்குகிறார் கமால். 

எண்ணற்ற ஆவணத் தரவுகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட சிறந்த ஆவணமெனக் குறிப்பிடத்தக்க இந்த நூல் வரலாற்றை வாசிப்பவர்களுக்குப் பெருவிருந்து. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.