எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ராவண நிழல்

நாட்டுப்புறக்கலை ஆர்வலர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2024, 10:37 am

DIN

ராவண நிழல் - இரா.சைலஜா சக்தி; பக்.497; ரூ.540; காவ்யா பதிப்பகம், சென்னை - 24; ✆98404 80232.

தமிழகத்தில் தோல்பாவைக் கூத்து ஒரு குடும்ப கலையாகவே இருந்து வருகிறது. இந்த நாட்டுப்புறக் கலையை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்த நாவல்.

பெரும்பாலும், கணிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கூத்துக்கலையை நடத்துகின்றனர். தென்மாவட்டத்தின் மருதகுளம், வாகையூர் கிராமங்களை கதைக்

களமாக கொண்டு எழுதப்பட்ட இந்நூல், ஜமீன்தார் காலத்துக்குப் பின்னர் தோல்பாவை கூத்தின் வீழ்ச்சி, கூத்து நடத்துபவரின் பிரச்னைகள் குறித்து பேசுகின்றது.

மருதகுளம் கிராமத்தில் இரு ஆண்டுகளாக மழையில்லாததால் பஞ்சாயத்து கூட்டி தோல்பாவை கூத்து நடத்த முடிவெடுக்கப்படுகிறது. உடனே தோல்பாவை கூத்துக்கலைஞர் சண்முகத்திடம் கூத்து கலை நடத்த ஊர் தலைவர் உத்தரவிடுகிறார். இதற்கிடையே வாகையூரில் இருந்து மருதகுளத்துக்கு திருட வந்த சங்கிலியை சண்முகம் காட்டி கொடுக்க இருவருக்கும் பகையானது. இதனால் சண்முகத்துக்கும், அவரின் சுற்றத்தாருக்கு ஏற்படும் பிரச்னைகள், அதை தாண்டி எப்படி கூத்தை நடத்தி முடிக்கிறான், இரு ஊரின் பகை தீர்ந்ததா என்பதை வலுவான கதாபாத்திரங்கள் மூலம் உள்ளூர் மொழியில் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

'கோயிலை சார்ந்திருக்கும் கிராமியக் கலைகளுக்கு அழிவில்லை, அதே நேரத்தில் தோல்பாவைக் கூத்து போன்ற எத்தனையோ நாட்டுப்புறக் கலைகள் அழிவை நோக்கி செல்கின்றன' என்ற நூலாசிரியரின் கருத்து சிந்திக்கத்தக்கது. ஒவ்வொரு கதையின் இடையிலும் தோல்பாவைகூத்தின் முக்கியத்துவத்தை பெருமாள் சார் மூலம் மரம், கிளி பேசுகிறது. தோல்பாவைக் கூத்துக்கலைஞர்களின் வரலாறு, வாழ்வியல், அவலத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. நாட்டுப்புறக்கலை ஆர்வலர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

ராவண நிழல் - இரா.சைலஜா சக்தி; பக்.497; ரூ.540; காவ்யா பதிப்பகம், சென்னை - 24; ✆98404 80232.

தமிழகத்தில் தோல்பாவைக் கூத்து ஒரு குடும்ப கலையாகவே இருந்து வருகிறது. இந்த நாட்டுப்புறக் கலையை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்த நாவல்.

பெரும்பாலும், கணிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கூத்துக்கலையை நடத்துகின்றனர். தென்மாவட்டத்தின் மருதகுளம், வாகையூர் கிராமங்களை கதைக்

களமாக கொண்டு எழுதப்பட்ட இந்நூல், ஜமீன்தார் காலத்துக்குப் பின்னர் தோல்பாவை கூத்தின் வீழ்ச்சி, கூத்து நடத்துபவரின் பிரச்னைகள் குறித்து பேசுகின்றது.

மருதகுளம் கிராமத்தில் இரு ஆண்டுகளாக மழையில்லாததால் பஞ்சாயத்து கூட்டி தோல்பாவை கூத்து நடத்த முடிவெடுக்கப்படுகிறது. உடனே தோல்பாவை கூத்துக்கலைஞர் சண்முகத்திடம் கூத்து கலை நடத்த ஊர் தலைவர் உத்தரவிடுகிறார். இதற்கிடையே வாகையூரில் இருந்து மருதகுளத்துக்கு திருட வந்த சங்கிலியை சண்முகம் காட்டி கொடுக்க இருவருக்கும் பகையானது. இதனால் சண்முகத்துக்கும், அவரின் சுற்றத்தாருக்கு ஏற்படும் பிரச்னைகள், அதை தாண்டி எப்படி கூத்தை நடத்தி முடிக்கிறான், இரு ஊரின் பகை தீர்ந்ததா என்பதை வலுவான கதாபாத்திரங்கள் மூலம் உள்ளூர் மொழியில் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

'கோயிலை சார்ந்திருக்கும் கிராமியக் கலைகளுக்கு அழிவில்லை, அதே நேரத்தில் தோல்பாவைக் கூத்து போன்ற எத்தனையோ நாட்டுப்புறக் கலைகள் அழிவை நோக்கி செல்கின்றன' என்ற நூலாசிரியரின் கருத்து சிந்திக்கத்தக்கது. ஒவ்வொரு கதையின் இடையிலும் தோல்பாவைகூத்தின் முக்கியத்துவத்தை பெருமாள் சார் மூலம் மரம், கிளி பேசுகிறது. தோல்பாவைக் கூத்துக்கலைஞர்களின் வரலாறு, வாழ்வியல், அவலத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. நாட்டுப்புறக்கலை ஆர்வலர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.