எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திரைகடல் ஓடு, திரவியம் தேடு

மேம்படுத்துவது தொடர்பான ஏராளமான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2024, 10:58 am

DIN

திரைகடல் ஓடு, திரவியம் தேடு, இயகோகா சுப்பிரமணியம்; பக்.184; ரூ.180; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044- 24353742.

தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நூலில், அனுபவத்தைப் பெற்றவர்கள் தெரிந்து வைத்துள்ளதை எளிமையாகவும், மனதில் நிற்கும் வகையிலும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

சரியான முறையில் கணக்குகள் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம்; அரசின் சட்டத் திட்டங்களை அறிந்து அதன்படி செயல்படுதல்; தரமான மூலப் பொருள்கள், இயந்திரங்களைக் கையாளுதல்; பொறுப்புணர்வோடு செயல்படுதல்; எடுத்தவுடன் அகலக் கால் வைக்காமல் தனது வசதிகளுக்கான அளவில் செயல்படுதல் ஆகியன அனைத்து தொழில்களுக்கும் தேவை என்பது அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தொழில்முனையும்போது அரசியல், சமுதாய, தொழில் அமைப்புகளால் ஏற்படக் கூடிய சிரமங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்; கவனமுடன் செயல்பட வேண்டும் என கூறுவது இளம் தொழில்முனைவோருக்கு பாடமாக அமையும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் வணிகம் செய்வதற்கான வழிமுறைகள், மொழி அறிவு, மதங்களை மதிக்கும் பண்புகள், திட்டமிட்டு செயலாற்றுதல் என முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்துக் கருத்துகளும் ஒன்று திரட்டி தரப்பட்டுள்ளது.

மணித்துளியின் மதிப்பு, திறந்த புத்தகமாக இருங்கள், காலம் நிச்சயம் மாறும், காவிரி அட்லாண்டிக்கில் கலக்காது, பாடம் சொல்லும் பாரம்பரியம், சிக்கனம் தேவைப்படும் காலம்,

மகுடத்தில் வைரம் என முதல் அத்தியாயம் முதல் 26-ஆவது அத்தியாயம் வரை தொழில் தொடங்குவது, மேம்படுத்துவது தொடர்பான ஏராளமான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. புதிய பாதையை இந்த நூல் அமைத்துத் தரும்.

திரைகடல் ஓடு, திரவியம் தேடு, இயகோகா சுப்பிரமணியம்; பக்.184; ரூ.180; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044- 24353742.

தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நூலில், அனுபவத்தைப் பெற்றவர்கள் தெரிந்து வைத்துள்ளதை எளிமையாகவும், மனதில் நிற்கும் வகையிலும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

சரியான முறையில் கணக்குகள் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம்; அரசின் சட்டத் திட்டங்களை அறிந்து அதன்படி செயல்படுதல்; தரமான மூலப் பொருள்கள், இயந்திரங்களைக் கையாளுதல்; பொறுப்புணர்வோடு செயல்படுதல்; எடுத்தவுடன் அகலக் கால் வைக்காமல் தனது வசதிகளுக்கான அளவில் செயல்படுதல் ஆகியன அனைத்து தொழில்களுக்கும் தேவை என்பது அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தொழில்முனையும்போது அரசியல், சமுதாய, தொழில் அமைப்புகளால் ஏற்படக் கூடிய சிரமங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்; கவனமுடன் செயல்பட வேண்டும் என கூறுவது இளம் தொழில்முனைவோருக்கு பாடமாக அமையும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் வணிகம் செய்வதற்கான வழிமுறைகள், மொழி அறிவு, மதங்களை மதிக்கும் பண்புகள், திட்டமிட்டு செயலாற்றுதல் என முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்துக் கருத்துகளும் ஒன்று திரட்டி தரப்பட்டுள்ளது.

மணித்துளியின் மதிப்பு, திறந்த புத்தகமாக இருங்கள், காலம் நிச்சயம் மாறும், காவிரி அட்லாண்டிக்கில் கலக்காது, பாடம் சொல்லும் பாரம்பரியம், சிக்கனம் தேவைப்படும் காலம்,

மகுடத்தில் வைரம் என முதல் அத்தியாயம் முதல் 26-ஆவது அத்தியாயம் வரை தொழில் தொடங்குவது, மேம்படுத்துவது தொடர்பான ஏராளமான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. புதிய பாதையை இந்த நூல் அமைத்துத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.