காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

நீர் விளக்கு

News image
Updated On :19 பிப்ரவரி 2024, 3:44 pm IST

நீர் விளக்கு - பென்னிகுக் - பொ.கந்தசாமி; பக்.260; ரூ.350; கவிமுரசு பதிப்பகம், சிவகாசி - 626130; ✆ 9080461839.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் உயிர்நாடியான முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதற்கான நோக்கம், அதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுக், அவருக்கு முன்பாகவே முயற்சியை மேற்கொண்ட ராமநாதபுரம் மன்னர் சேதுபதி என்று தொடங்கி, தற்போதைய நிலவரம் வரை பல்வேறு தகவல்கள் சுவாரசியமாக இந்த வரலாற்றுப் புதினத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அணையின் அமைவிடம், நீளம் உயரம், சுரங்கங்கள், துணை அணைகள், கிளை ஆறுகள், துணை ஆறுகள், பயன்பெறும் பகுதிகள், பென்னிக்கு உதவிய மண்ணின் மைந்தர்களான பேயத்தேவர், ஆங்கூர் ராவுத்தர், ஆனைவிரட்டி ஆங்கத் தேவர், காடுவெட்டி கருத்தக்கண்ணுத் தேவர் உள்ளிட்ட பலரையும், கொடைக்கானலுக்கும் அவருக்குமான தொடர்புகளையும், அணைச்சாமியார், டேவிட் என்ற இரு பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சென்னை மாகாண ஆளுநர்- திருவிதாங்கூர் சமஸ்தான ஒப்பந்தம், சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய், கல்லணை, பவானி சாகர் அணைகள், சூயஸ் கால்வாய் ஆகியவற்றின் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் புள்ளிவிவரத் தரவுகளுடன் பதிவு செய்திருப்பது சிறப்பு.

ஆங்கிலேயராக இருந்தும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்களால் கடவுளாகக் கொண்டாடப்படும் பென்னிகுக்கின் எதிர்பார்ப்பில்லாத உழைப்புடன் இன்றைய அரசு அதிகாரிகள், ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றை ஒப்பிட்டு அதற்கான மதிப்பீட்டை வாசகர்களிடமே ஒப்படைத்திருக்கிறார் நூலாசிரியர். நல்லதொரு நூல் இது.

நீர் விளக்கு - பென்னிகுக் - பொ.கந்தசாமி; பக்.260; ரூ.350; கவிமுரசு பதிப்பகம், சிவகாசி - 626130; ✆ 9080461839.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் உயிர்நாடியான முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதற்கான நோக்கம், அதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுக், அவருக்கு முன்பாகவே முயற்சியை மேற்கொண்ட ராமநாதபுரம் மன்னர் சேதுபதி என்று தொடங்கி, தற்போதைய நிலவரம் வரை பல்வேறு தகவல்கள் சுவாரசியமாக இந்த வரலாற்றுப் புதினத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அணையின் அமைவிடம், நீளம் உயரம், சுரங்கங்கள், துணை அணைகள், கிளை ஆறுகள், துணை ஆறுகள், பயன்பெறும் பகுதிகள், பென்னிக்கு உதவிய மண்ணின் மைந்தர்களான பேயத்தேவர், ஆங்கூர் ராவுத்தர், ஆனைவிரட்டி ஆங்கத் தேவர், காடுவெட்டி கருத்தக்கண்ணுத் தேவர் உள்ளிட்ட பலரையும், கொடைக்கானலுக்கும் அவருக்குமான தொடர்புகளையும், அணைச்சாமியார், டேவிட் என்ற இரு பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சென்னை மாகாண ஆளுநர்- திருவிதாங்கூர் சமஸ்தான ஒப்பந்தம், சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய், கல்லணை, பவானி சாகர் அணைகள், சூயஸ் கால்வாய் ஆகியவற்றின் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் புள்ளிவிவரத் தரவுகளுடன் பதிவு செய்திருப்பது சிறப்பு.

ஆங்கிலேயராக இருந்தும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்களால் கடவுளாகக் கொண்டாடப்படும் பென்னிகுக்கின் எதிர்பார்ப்பில்லாத உழைப்புடன் இன்றைய அரசு அதிகாரிகள், ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றை ஒப்பிட்டு அதற்கான மதிப்பீட்டை வாசகர்களிடமே ஒப்படைத்திருக்கிறார் நூலாசிரியர். நல்லதொரு நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.