எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

DIN

கறுப்பு அமெரிக்கா - வானதி; பக்.352; ரூ.400; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆044-42009603.

இந்நூல், அமெரிக்க வரலாற்றின் முக்கியமான அத்தியாயம் என்பது மட்டுமல்ல; நூலாசிரியரின் முந்தைய நூலான 'அமெரிக்க உள்நாட்டுப்போர்' என்பதன் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது.

அமெரிக்காவின் வரலாறு தியாகங்களாலும், போராட்டங்களாலும் மட்டுமே எழுதப்பட்டது அல்ல. ரத்தத்தாலும் எழுதப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. எண்ணற்ற அநீதிகள் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இன்னமும் அமெரிக்கா தனது காயங்களை ஆற்றிக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

இன்றைக்கு ஏறத்தாழ 170 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டாலும், கருப்பினத்தவர் போதுமான அரசியல் அதிகாரத்தை அடையவிடாமல் வெள்ளையர்களின் கைகளை எதிர்நோக்க வைத்த சட்டங்கள் குறித்து இந்நூல் விரிவாக அலசுகிறது.

அடிமைமுறைக்கு முடிவு கட்டிய ஆபிரகாம் லிங்கன் மறைவுக்குப் பிறகும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு வெள்ளையரின் இனவெறியை கருப்பினத்தவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதற்கு 1865 - 1968 வரையிலான அமெரிக்க வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் விரிவாக அலசுகிறது.

இந்நூல் அமெரிக்காவின் கடந்தகாலக் கதை என்றாலும் அது நிகழ்காலத்திலும் தொடர்கிறது என்பதுதான் வேதனை. கடந்தகால இழிவுகளை நாம் நினைவூட்டிக் கொள்வதன் மூலம் மீண்டும் அப்படியானதொரு நிலைக்கு உலகில் எந்த நாடும் செல்லக்கூடாது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

கறுப்பு அமெரிக்கா - வானதி; பக்.352; ரூ.400; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆044-42009603.

இந்நூல், அமெரிக்க வரலாற்றின் முக்கியமான அத்தியாயம் என்பது மட்டுமல்ல; நூலாசிரியரின் முந்தைய நூலான 'அமெரிக்க உள்நாட்டுப்போர்' என்பதன் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது.

அமெரிக்காவின் வரலாறு தியாகங்களாலும், போராட்டங்களாலும் மட்டுமே எழுதப்பட்டது அல்ல. ரத்தத்தாலும் எழுதப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. எண்ணற்ற அநீதிகள் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இன்னமும் அமெரிக்கா தனது காயங்களை ஆற்றிக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

இன்றைக்கு ஏறத்தாழ 170 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டாலும், கருப்பினத்தவர் போதுமான அரசியல் அதிகாரத்தை அடையவிடாமல் வெள்ளையர்களின் கைகளை எதிர்நோக்க வைத்த சட்டங்கள் குறித்து இந்நூல் விரிவாக அலசுகிறது.

அடிமைமுறைக்கு முடிவு கட்டிய ஆபிரகாம் லிங்கன் மறைவுக்குப் பிறகும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு வெள்ளையரின் இனவெறியை கருப்பினத்தவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதற்கு 1865 - 1968 வரையிலான அமெரிக்க வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் விரிவாக அலசுகிறது.

இந்நூல் அமெரிக்காவின் கடந்தகாலக் கதை என்றாலும் அது நிகழ்காலத்திலும் தொடர்கிறது என்பதுதான் வேதனை. கடந்தகால இழிவுகளை நாம் நினைவூட்டிக் கொள்வதன் மூலம் மீண்டும் அப்படியானதொரு நிலைக்கு உலகில் எந்த நாடும் செல்லக்கூடாது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.