எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

DIN

சங்க அக நூல்களும் காமத்துப்பாலும் - முனைவர் கு.சக்திலீலா; பக்.262; ரூ.290; காவ்யா, சென்னை-24; ✆044-23726882.

பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள் வழி நின்று சங்க இலக்கியங்களில் தமிழரின் அக நிலையை அப்படியே படம் பிடிப்பது போல காட்சிப்படுத்தி நூலாசிரியர் விளக்கியுள்ளார். திணைக் கோட்பாடு,செவ்வியல் இலக்கியத்தில் காதல், அகமாந்தர்கள், பொருள் ஒப்புமை, புலப்பாட்டுத் திறன் என ஐந்து தலைப்புகளில் பாடல்களையும் எளிதில் படிப்போர் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார்.

சங்க அகப்பாடல்களில் காதல், காமம் எனும் சொற்கள் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளன என்பதையும், அவை தரும் பொருள்களையும் கலித்தொகை, பரிபாடல் மூலம் விளக்கியுள்ளார். அதேபோல இன்பம் எனும் சொல் சரியாக எந்தப் பொருளை குறிக்கிறது என்பதையும் ஆய்வு நோக்கில் விளக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கத்து.

தமிழரின் தனிமனித வாழ்வையும், அதன் வழியாக தமிழ்ச் சமுதாயத்தின் பழமையான வாழ்க்கை முறையையும் வெளிப்படுத்துபவையாக சங்க அக நூல்கள் திகழ்வதை அவற்றுக்கான பாடல்கள் மூலம் இளந்தலைமுறைக்கு ஏற்ப எளிமையாக எடுத்துரைக்கிறது. சங்க இலக்கிய சாராம்சம் சங்க அக நூல்களும், காமத்துப்பாலும் எனும் தலைப்பில் நூலாக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பண்பாட்டை எடுத்துரைக்கும் நூல் இது.

சங்க அக நூல்களும் காமத்துப்பாலும் - முனைவர் கு.சக்திலீலா; பக்.262; ரூ.290; காவ்யா, சென்னை-24; ✆044-23726882.

பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள் வழி நின்று சங்க இலக்கியங்களில் தமிழரின் அக நிலையை அப்படியே படம் பிடிப்பது போல காட்சிப்படுத்தி நூலாசிரியர் விளக்கியுள்ளார். திணைக் கோட்பாடு,செவ்வியல் இலக்கியத்தில் காதல், அகமாந்தர்கள், பொருள் ஒப்புமை, புலப்பாட்டுத் திறன் என ஐந்து தலைப்புகளில் பாடல்களையும் எளிதில் படிப்போர் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார்.

சங்க அகப்பாடல்களில் காதல், காமம் எனும் சொற்கள் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளன என்பதையும், அவை தரும் பொருள்களையும் கலித்தொகை, பரிபாடல் மூலம் விளக்கியுள்ளார். அதேபோல இன்பம் எனும் சொல் சரியாக எந்தப் பொருளை குறிக்கிறது என்பதையும் ஆய்வு நோக்கில் விளக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கத்து.

தமிழரின் தனிமனித வாழ்வையும், அதன் வழியாக தமிழ்ச் சமுதாயத்தின் பழமையான வாழ்க்கை முறையையும் வெளிப்படுத்துபவையாக சங்க அக நூல்கள் திகழ்வதை அவற்றுக்கான பாடல்கள் மூலம் இளந்தலைமுறைக்கு ஏற்ப எளிமையாக எடுத்துரைக்கிறது. சங்க இலக்கிய சாராம்சம் சங்க அக நூல்களும், காமத்துப்பாலும் எனும் தலைப்பில் நூலாக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பண்பாட்டை எடுத்துரைக்கும் நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.