திருக்குறள் காமத்துப்பால் வாழ்வியல் - கோவிந்தம்மாள் சோதி நடராசன்; பக். 356; ரூ. 300; விக்னா வெஞ்சர்ஸ், சென்னை - 92; ✆ 98847 10065.
ஈரடியால் படைக்கப்பட்டதும் முப்பாலாய் தொகுக்கப்பட்டதும் நான்கு திசைகளையும் வென்று 'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுவதுமானது திருக்குறள். எப்படி வாழ்வதென்ற அறத்தையும், வாழ்க்கைக்கான பொருளையும், வாழ்வின்இன்பத்தையும் இந்த நூல் உணர்த்துகிறது. குறளின் முதலிரண்டு பால்கள் குறித்து இதுவரை ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் முப்பாலின் மூன்றாம் பாலான காமத்துப்பால் குறித்து பேசுவதும் எழுதுவதும் மிக, மிகக் குறைவாகவே உள்ளது.
கற்றறிந்தவர்கள்கூட காமத்துப்பால் குறித்து எழுதத் தயங்குவதற்கு 'காமம்' என்ற சொல் பற்றிய தவறான புரிதலே காரணம். எனினும், ஆசை, விருப்பம் எனப் பொருள்படும் காமம் இல்லையேல் உலகும் இல்லை; உயிர்களும் இல்லை.
காமத்துப்பாலைத் தீண்டத் தகாததாக எண்ணி ஒதுக்குவதாலோ என்னவோ இல்லறம் குறித்த புரிதல்கள் குறைந்து, குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகள் நிறைந்து வருகின்றன.
அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் காமத்துப்பால் காட்டும் தூய காதலை, வாழ்வியலைப் பற்றி தெளிவுறவுப் பேசுகிறது இந்த நூல்.
காமத்துப்பாலின் 25 அதிகாரங்களுக்கும் சங்க கால, பிற்கால, நவீன இலக்கியங்களிலிருந்து மட்டுமன்றி, திரையிசைப் பாடல்களிலிருந்தும், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்தும் எடுத்துக்காட்டுகளுடன் எளிய நடையில், ஒரு நாவலை வாசிப்பதுபோன்ற உணர்வு ஏற்படும் வகையில் நூலைத் தந்துள்ளார் நூலாசிரியர்.
ஒவ்வோர் அதிகாரத்துக்கும் மற்ற அதிகாரங்களிலிருந்து ஏற்ற குறள்களைக் குறிப்பிட்டு விளக்கம் தந்திருப்பது அருமை. தமிழ், குறள் ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல திருமணப் பரிசாகவும் கொடுப்பதற்கு ஏற்ற நூல்.
திருக்குறள் காமத்துப்பால் வாழ்வியல் - கோவிந்தம்மாள் சோதி நடராசன்; பக். 356; ரூ. 300; விக்னா வெஞ்சர்ஸ், சென்னை - 92; ✆ 98847 10065.
ஈரடியால் படைக்கப்பட்டதும் முப்பாலாய் தொகுக்கப்பட்டதும் நான்கு திசைகளையும் வென்று 'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுவதுமானது திருக்குறள். எப்படி வாழ்வதென்ற அறத்தையும், வாழ்க்கைக்கான பொருளையும், வாழ்வின்இன்பத்தையும் இந்த நூல் உணர்த்துகிறது. குறளின் முதலிரண்டு பால்கள் குறித்து இதுவரை ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் முப்பாலின் மூன்றாம் பாலான காமத்துப்பால் குறித்து பேசுவதும் எழுதுவதும் மிக, மிகக் குறைவாகவே உள்ளது.
கற்றறிந்தவர்கள்கூட காமத்துப்பால் குறித்து எழுதத் தயங்குவதற்கு 'காமம்' என்ற சொல் பற்றிய தவறான புரிதலே காரணம். எனினும், ஆசை, விருப்பம் எனப் பொருள்படும் காமம் இல்லையேல் உலகும் இல்லை; உயிர்களும் இல்லை.
காமத்துப்பாலைத் தீண்டத் தகாததாக எண்ணி ஒதுக்குவதாலோ என்னவோ இல்லறம் குறித்த புரிதல்கள் குறைந்து, குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகள் நிறைந்து வருகின்றன.
அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் காமத்துப்பால் காட்டும் தூய காதலை, வாழ்வியலைப் பற்றி தெளிவுறவுப் பேசுகிறது இந்த நூல்.
காமத்துப்பாலின் 25 அதிகாரங்களுக்கும் சங்க கால, பிற்கால, நவீன இலக்கியங்களிலிருந்து மட்டுமன்றி, திரையிசைப் பாடல்களிலிருந்தும், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்தும் எடுத்துக்காட்டுகளுடன் எளிய நடையில், ஒரு நாவலை வாசிப்பதுபோன்ற உணர்வு ஏற்படும் வகையில் நூலைத் தந்துள்ளார் நூலாசிரியர்.
ஒவ்வோர் அதிகாரத்துக்கும் மற்ற அதிகாரங்களிலிருந்து ஏற்ற குறள்களைக் குறிப்பிட்டு விளக்கம் தந்திருப்பது அருமை. தமிழ், குறள் ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல திருமணப் பரிசாகவும் கொடுப்பதற்கு ஏற்ற நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒளவையின் செந்தமிழ்ப் புதையல்

வரப்பெற்றோம் (02.03.2026)

வரப்பெற்றோம் (23-02-2026)
உதயபானு கான்மலர்
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

