தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தொரசாமி

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து கல்வி கற்று வெளிவரும் ஒருவர் சந்திக்கும் சவால்கள் எத்தனை வலுவானது என்பதை ஆசிரியர் கூறிச் செல்கிறார்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2025, 7:01 am

தினமணி செய்திச் சேவை

தொரசாமி-ஜெ.அன்பு ; பக். 222; ரூ.299; அறம் பதிப்பகம், ஆரணி-632 316; ✆ 91507 24997

போராட்டங்களாலும் பண்பாட்டு அடையாளங்களாலும் நாம் சார்ந்து இருக்கும் சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர முடியாது. அதற்கு கல்வியும் வாசிப்பும் கட்டாயம் தேவை. அதுதான் சமூக வேலியை உடைத்து தனக்கான சுதந்திரத்துக்கு ஒரு பெரும் குரலை எடுத்துச் செல்லும் என்பதைத்தான் தொரசாமி நாவல் சொல்கிறது.

ஒரு வரலாற்று நிகழ்வை தற்கால சமூக மாற்றத்துக்கான சாரமாக அலசி, அதிலுள்ள சம்பவங்களால் ஏற்பட்ட ஜாதிய அடக்குமுறை அதன் வழியாக கல்வி மறுப்பு என்ற அடிப்படை உரிமையைப் பெறுவதற்கு எத்தனை தடைகளை உடைக்க வேண்டும் என்பதை நாவல் ஆசிரியர் கூறுகிறார்.

பொருளாதார சுதந்திரமின்மை மற்றும் தீண்டாமை போன்றவை தங்களை அண்டாமல் காக்க கிறிஸ்தவத்தை தழுவிய தென் திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த சாம்பவர் என்ற சமூகத்தின் வாழ்வியல் வெளிச்சத்தில் காட்ட முயன்றிருக்கிறார் நாவலாசிரியர்.

சிறு சிறு அசைவுகளையும்கூட படைப்பாளி பதிவு செய்திருக்கும் விதமும், கதாபாத்திரங்களைத் தேர்வு செய்திருக்கும் நுட்பமும், கதைச் சூழலை வாசகனுக்கு தெரிவிக்கும் பாங்கும் பாராட்டுக்குரியது. இது நூலாசிரியரின் முதல் படைப்பு என்பதை அறிந்தால் வியப்பு மேலிடுகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து கல்வி கற்று வெளிவரும் ஒருவர் சந்திக்கும் சவால்கள் எத்தனை வலுவானது என்பதை ஆசிரியர் கூறிச் செல்கிறார்.

தமிழில் இதுபோன்ற நாவல்களை முன்னணி எழுத்தாளர்கள் எழுதியிருந்தாலும் வந்திருந்தாலும், நூலாசிரியர் கொண்டு வந்திருக்கும் இந்த நாவலின் நடை அமைப்பு சலிப்பு தட்டாத வகையில், சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைக்கிறது.

தொரசாமி-ஜெ.அன்பு ; பக். 222; ரூ.299; அறம் பதிப்பகம், ஆரணி-632 316; ✆ 91507 24997

போராட்டங்களாலும் பண்பாட்டு அடையாளங்களாலும் நாம் சார்ந்து இருக்கும் சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர முடியாது. அதற்கு கல்வியும் வாசிப்பும் கட்டாயம் தேவை. அதுதான் சமூக வேலியை உடைத்து தனக்கான சுதந்திரத்துக்கு ஒரு பெரும் குரலை எடுத்துச் செல்லும் என்பதைத்தான் தொரசாமி நாவல் சொல்கிறது.

ஒரு வரலாற்று நிகழ்வை தற்கால சமூக மாற்றத்துக்கான சாரமாக அலசி, அதிலுள்ள சம்பவங்களால் ஏற்பட்ட ஜாதிய அடக்குமுறை அதன் வழியாக கல்வி மறுப்பு என்ற அடிப்படை உரிமையைப் பெறுவதற்கு எத்தனை தடைகளை உடைக்க வேண்டும் என்பதை நாவல் ஆசிரியர் கூறுகிறார்.

பொருளாதார சுதந்திரமின்மை மற்றும் தீண்டாமை போன்றவை தங்களை அண்டாமல் காக்க கிறிஸ்தவத்தை தழுவிய தென் திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த சாம்பவர் என்ற சமூகத்தின் வாழ்வியல் வெளிச்சத்தில் காட்ட முயன்றிருக்கிறார் நாவலாசிரியர்.

சிறு சிறு அசைவுகளையும்கூட படைப்பாளி பதிவு செய்திருக்கும் விதமும், கதாபாத்திரங்களைத் தேர்வு செய்திருக்கும் நுட்பமும், கதைச் சூழலை வாசகனுக்கு தெரிவிக்கும் பாங்கும் பாராட்டுக்குரியது. இது நூலாசிரியரின் முதல் படைப்பு என்பதை அறிந்தால் வியப்பு மேலிடுகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து கல்வி கற்று வெளிவரும் ஒருவர் சந்திக்கும் சவால்கள் எத்தனை வலுவானது என்பதை ஆசிரியர் கூறிச் செல்கிறார்.

தமிழில் இதுபோன்ற நாவல்களை முன்னணி எழுத்தாளர்கள் எழுதியிருந்தாலும் வந்திருந்தாலும், நூலாசிரியர் கொண்டு வந்திருக்கும் இந்த நாவலின் நடை அமைப்பு சலிப்பு தட்டாத வகையில், சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.