வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

நாவல் வடிவில் காளிதாசரின் சாகுந்தலம்

சாகுந்தலத்தின் மூல வடிவை வாசித்தவர்களுக்கு இந்த நாவல் ஒரு புதிய அனுபவத்தைத் தரும்; சாகுந்தலத்தை இதுவரை வாசிக்காதவர்களுக்கு காளிதாசரின் மூல படைப்பைத் தேடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இருக்கிறது நாவலாசிரியரின் எழுத்தாளுமை.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 9:54 am

நாவல் வடிவில் காளிதாசரின் சாகுந்தலம்-கே.ஜி. ஜவர்லால்; பக்.144; ரூ. 170; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127, ✆ 81480 66645.

காளிதாசரின் ஆகச்சிறந்த படைப்பான 'அபிஞான சாகுந்தலம்' (சாகுந்தலம்) என்பது சம்ஸ்கிருத இலக்கியத்தின் ஒரு மைல் கல்லாகும். இது துஷ்யந்த மன்னனுக்கும் சகுந்தலைக்கும் இடையிலான காதலைச் சொல்லும் ஓர் உயர்ந்த நாடகக் காப்பியம். நாடக வடிவிலான இலக்கியப் படைப்பை நாவல் வடிவில் ஆக்கித் தந்திருக்கிறார் நூலாசிரியர்.

காளிதாசரை 'உபமா காளிதாச' (உவமைக்கு காளிதாசன்) என்று புகழ்வதுண்டு. ஆரம்பம் முதலே இந்த நாவலை வாசிக்கும்போது நாம் காளிதாசரின் கதாபாத்திரங்கள் உலாவிய வனப் பகுதிக்கும், ரிஷி பூமிக்கும் பிரவேசிக்கும் உணர்வைப் பெறுகிறோம். 'மனதுக்குப் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுகிறவர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள்; வலிமையும் வீரமும் இருக்கிறவர்கள் பணிவது அவர்களுக்கு மிகுந்த மேன்மையைத் தரும்' உள்ளிட்ட வாழ்வியலுக்குத் தேவையான கருத்துகள் கதாபாத்திரங்கள் வழியே நமக்குக் கிடைக்கின்றன.

காடு, காட்டில் உள்ள மரங்கள், நீரோடைகள், செடி- கொடிகள் அதில் உள்ள மரங்கள், பறவைகள், சாதுவான விலங்குகள் என ஒரு மென்மையான ரசனை மிகுந்த சூழலில் பேரழகுள்ள ஒரு பெண் தன் தோழிகளுடன் பேசிக் கொண்டிருப்பதையும், அதைப் பார்த்து துஷ்யந்தன் மனம் லயிப்பதுமான காட்சியை விளக்கும்போது நாமும் அவர்களுள் ஒருவராகி விடுகிறோம்.

சாகுந்தலத்தின் மூல வடிவை வாசித்தவர்களுக்கு இந்த நாவல் ஒரு புதிய அனுபவத்தைத் தரும்; சாகுந்தலத்தை இதுவரை வாசிக்காதவர்களுக்கு காளிதாசரின் மூல படைப்பைத் தேடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இருக்கிறது நாவலாசிரியரின் எழுத்தாளுமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.