வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

ஐம்பெருங் காப்பியம் சீவக சிந்தாமணி - மூலமும் உரையும் (இரண்டு, மூன்றாம் பாகங்கள்)

இத்தகைய புதிய பதிப்பு முயற்சிகள் சிந்தாமணி சிறக்க உதவியாக இருக்கும்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

ஐம்பெருங் காப்பியம் சீவக சிந்தாமணி - மூலமும் உரையும் (இரண்டு, மூன்றாம் பாகங்கள்), உரையாசிரியர் - முனைவர் கரு. முத்தய்யா, பக். 592, ரூ. 500; பக். 584, ரூ. 600; கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600 033, ✆ 04565 - 238783.

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை வெளியிட்ட கோவிலூர் மடம், சீவகசிந்தாமணியையும் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளது. பின்னிரு நூல்களில் இரண்டாம் பாகத்தில் 1,144 பாடல்களுக்கும், மூன்றாம் பாகத்தில் 1,151 பாடல்களுக்கும் மூலத்துடன் பொருளும் பதவுரையும் தேவைப்படும் இடங்களில் விளக்கமும் தந்திருக்கிறார் உரையாசிரியர் கரு. முத்தய்யா.

உ.வே.சா. விளக்கக் குறிப்புகளுடன் நச்சினார்க்கினியர் விளக்கத்தையும் ஒப்புநோக்கி, எளிமையாக, ஆனால் ஆய்வு மாணவர்களும் பயனுறத்தக்க உரை நூலைத் தந்துள்ளார்; வள்ளுவத்துக்கு விளக்கமாகவும் நூல் அமைவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிந்தாமணி முழுவதும் திருத்தக்க தேவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் கவிநயமும் பொருள் நயமும் கொண்டவை. கன்னி மாநகர்க் கன்னியர் சூழ்தரக் / கன்னி மாடம் அடையக் கடிமலர்க் / கன்னி நீலக்கண் கன்னிநற் றாய்க்கவள் / கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினர். ஏழு முறை இடம்பெறும் கன்னி என்ற சொல் விதவிதமான பொருள் தருகிறது.

சீவகனின் மகிழ்ச்சிமிக்க வாழ்வை உற்சாகமான பாடல்களில் விவரிக்கும் திருத்தக்க தேவர், காப்பியத்தின் நிறைவில் சீவகன் கூற்றாக நிலையாமை பற்றிக் குறிப்பிடுகிறார். இந்தப் பாடல்கள் யாவும் தனிச் சிறப்பு கொண்டவை. ஒளிறுதேர்... என்ற பாடலில் சீவகன் செய்த தவத்தைப் போராக உருவகித்துப் பாடுகிறார் தேவர்.

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் அளவுக்கு மணிமேகலையும் மணிமேகலை அளவுக்கு சீவக சிந்தாமணியும் தமிழ் மக்களை, வாசகர்களைச் சென்றடையவில்லை எனலாம்.

இத்தகைய புதிய பதிப்பு முயற்சிகள் சிந்தாமணி சிறக்க உதவியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.