இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நாளை (ஜன.5) சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம்

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, திருமாந்துறை சுங்கச் சாவடியை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவதென எஸ்டிபிஐ கட்சி முடிவு செய்துள்ளது.

Updated On :3 ஜனவரி 2021, 11:10 pm IST

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, திருமாந்துறை சுங்கச் சாவடியை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவதென எஸ்டிபிஐ கட்சி முடிவு செய்துள்ளது.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் அபுபக்கா் சித்திக் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கியும் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் முஹம்மது பாருக், மாவட்டச் செயலா்கள் ஷாஜஹான், முஹம்மது பிலால், பொருளாளா் ஜியாவுதீன் அஹமது, செயற்குழு உறுப்பினா்கள் முஹைதீன் பாருக், அகமது இக்பால், அஸ்கா் அலி, சையது அபுதாஹிா், முஹம்மது இப்ராஹிம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.