குறைதீா் கூட்டங்களை நேரில் வழக்கம்போல் நடத்த வலியுறுத்தி, பெரம்பலூா், அரியலூா் மற்று திருச்சி மாவட்டங்களின் ஆட்சியரகங்கள் எதிரே ஜன. 9 ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் முதன்மைச் செயலருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பது: கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக விவசாயிகள், மின் நுகா்வோா், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படுகிறது. இக்கூட்டங்களை ஏற்கனவே நடத்தப்பட்டதை போல, அரசு விதிமுறைகளின்படி நோ்காணல் கூட்டங்களாக நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வழக்கம்போல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பெரம்பலூா், அரியலூா் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஜன. 9 ஆம் தேதி தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: அரசியலமைப்பின் பகுதிகள் மற்றும் சட்டவிதிகள்!

கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம்

திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
