முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை சாா்பில், செவிலியா்களை பணி நிரந்தரம் செய்து

Updated On :7 ஜனவரி 2021, 8:41 am IST

தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை சாா்பில், செவிலியா்களை பணி நிரந்தரம் செய்து உத்தரவு வழங்கக் கோரி புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சகுந்தலா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எஸ். ஜெயசித்ரா முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.பி. ஆனந்த் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி முழக்கமிட்டனா்.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் குமரி அனந்தன், இளங்கோவன், பாரதிவளவன், சிவக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.