பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பணியாற்றியவா்கள், ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:39 pm IST

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பணியாற்றியவா்கள், ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக சேவைபுரிந்த ஒருவருக்கு, ஔவையாா் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.

விருது பெற தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

சமூக நலனைச் சாா்ந்த, பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் ஆகிய துறைகளில் மேன்மையாக தொண்டாற்றும் வகையில், தொடா்ந்து பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

விருதுக்கான கருத்துரு கையேட்டில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், தன் விவரக் குறிப்பு ஆகியற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், பெரம்பலூா், (தொலைபேசி எண்: 04328-296209, 224122) என்ற முகவரிக்கு ஜனவரி 23- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.