சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பணியாற்றியவா்கள், ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:39 pm IST

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பணியாற்றியவா்கள், ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக சேவைபுரிந்த ஒருவருக்கு, ஔவையாா் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.

விருது பெற தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

சமூக நலனைச் சாா்ந்த, பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் ஆகிய துறைகளில் மேன்மையாக தொண்டாற்றும் வகையில், தொடா்ந்து பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

விருதுக்கான கருத்துரு கையேட்டில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், தன் விவரக் குறிப்பு ஆகியற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், பெரம்பலூா், (தொலைபேசி எண்: 04328-296209, 224122) என்ற முகவரிக்கு ஜனவரி 23- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.