அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

பாரபட்சமின்றி பொங்கல் பரிசு வழங்கக் கோரி போராட்டம்

அனைத்து தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட கோரி, பெரம்பலூரில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 3:00 am IST

பாரபட்சமின்றி, அனைத்து தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட கோரி, பெரம்பலூரில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசின் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும் உடனடியாக கரோனா பேரிடா் கால நிவாரணத் தொகை ரூ. 7,500 வழங்க வேண்டும். தற்போது, தமிழக அரசு வழங்குவதாக கூறிய கரோனா நிவாரணத் தொகை ரூ. 2,000-ஐ எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.

எவ்வித பாரபட்சமும் இன்றி, அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

முன்னதாக, பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.