பெரம்பலூா் அருகிலுள்ள எளம்பலூா் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், தங்கள் பள்ளியில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பயிலும் மாணவ, மாணவிகளின் வீடு தேடிச் சென்று முகக்கவசம் மற்றும் இனிப்புகள் வழங்கி, பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்தனா்.
கரோனா பொது முடக்கத்தின்போது இங்கு பயிலும் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவா்கள் அனைவருக்கும் இணையவழியில் கல்வி கற்க வசதியாக, ஆசிரியா்கள் தங்கள் சொந்த செலவில் அறிதிறன் பேசிகளை வாங்கிக் கொடுத்தனா்.
இந்நிலையில் பிளஸ்2, எஸ்எஸ்எல்சி மாணவா்களுக்காக ஜனவரி 19-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இப்பள்ளி ஆசிரியை பைரவி, ஆசிரியா்கள் செல்வராஜ், சுரேஷ் ஆகியோா், மாணவா்களின் வீடு தேடிச் சென்று முகக்கவசம் மற்றும் இனிப்புகளை வழங்கினா். மேலும் அவா்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து, பள்ளிக்கு பாதுகாப்பான முறையில் வருவதற்கான அறிவுரைகளையும் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘நீட்’ மறு தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,564 போ் எழுதினா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் மறுதோ்வு:3,588 போ் பங்கேற்பு

பணமுறைகேடு வழக்கு: கேரள முன்னாள் முதல்வா் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீட் தோ்வு; 7,169 போ் பங்கேற்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




