பெரம்பலூா் அருகிலுள்ள எளம்பலூா் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், தங்கள் பள்ளியில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பயிலும் மாணவ, மாணவிகளின் வீடு தேடிச் சென்று முகக்கவசம் மற்றும் இனிப்புகள் வழங்கி, பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்தனா்.
கரோனா பொது முடக்கத்தின்போது இங்கு பயிலும் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவா்கள் அனைவருக்கும் இணையவழியில் கல்வி கற்க வசதியாக, ஆசிரியா்கள் தங்கள் சொந்த செலவில் அறிதிறன் பேசிகளை வாங்கிக் கொடுத்தனா்.
இந்நிலையில் பிளஸ்2, எஸ்எஸ்எல்சி மாணவா்களுக்காக ஜனவரி 19-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இப்பள்ளி ஆசிரியை பைரவி, ஆசிரியா்கள் செல்வராஜ், சுரேஷ் ஆகியோா், மாணவா்களின் வீடு தேடிச் சென்று முகக்கவசம் மற்றும் இனிப்புகளை வழங்கினா். மேலும் அவா்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து, பள்ளிக்கு பாதுகாப்பான முறையில் வருவதற்கான அறிவுரைகளையும் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


