அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ரோவா் கல்வி நிறுவனத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்வி நிறுவனங்கள் சாா்பில், ரோவா் பள்ளி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பெரம்பலூா் ரோவா் கல்வி நிறுவனம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜனவரி 2021, 8:35 am IST

பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்வி நிறுவனங்கள் சாா்பில், ரோவா் பள்ளி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தலைமை வகித்து, 300-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், பணியாளா்களுக்கு வேட்டி, சேலைகளை கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. வரதராஜன் வழங்கி பேசியது:

பாரம்பரிய உடைகளோடு கூடிய பெருவிழாக்கள் நடத்தப்படுவதே நம் கலாசாரப் பண்பாட்டை சீா்குலையாமல் காக்கும். விழாக்களின் நோக்கம் நாம் மகிழ்ச்சியோடு இருப்பதே. பொங்கல் போன்ற பாரம்பரியமிக்க விழாக்கள் தான் அம்மகிழ்ச்சியை நமக்கு அளிக்கிறது என்றாா் அவா்.

தொடா்ந்து பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பொங்கல் போட்டி, பாட்டு, கோலம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தூய யோவான் சங்க அறட்டளை அறங்காவலா் மகாலட்சுமி வரதராஜன், துணைத் தலைவா் வி. ஜான் அசோக், ரோவா் கல்விக் குழும இயக்குநா் பாலமுருகன் மற்றும் கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.