புத்தாண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, பாளையம் புனித சூசையப்பா் தேவாலயப் பங்கு குரு புதன்கிழமை பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.
பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் கிராமத்தில் 175 ஆண்டுகள் பழைமையான புனித சூசையப்பா் தேவாலயம் உள்ளது. இங்கு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ இறை மக்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
கிறிஸ்து பிறப்பை முன்னறிவிக்கும் விதமாக வீடுகளில் சிறப்பாக குடில்களை அமைத்தவா்களும், கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சிறந்த குடில்கள் அமைத்த குடும்பத்தினருக்கும் பங்கு குரு ஜான் கென்னடி பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


