எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் ஆயுதப்படை வளாகம் மற்றும் காவலா் குடியிருப்பில், சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :15 ஜனவரி 2021, 11:47 pm IST

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் ஆயுதப்படை வளாகம் மற்றும் காவலா் குடியிருப்பில், சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக காவல்துறை சிறப்பு இயக்குநா் ராஜேஷ் தாஸ், சமத்துவப் பொங்கல் விழாவை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.

இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத குருமாா்கள் பிராா்த்தனையுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தொடா்ந்து, காவல்துறை சிறப்பு இயக்குநா் ராஜேஷ் தாஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஆகியோா், எளம்பலூா் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமைக் காவலா் நாகராஜனை அறிமுகப்படுத்தினா்.

இவ்விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் காா்த்திகேயன், நீதிராஜ் உள்பட காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.