எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒன்றரை பவுன் நகை திருடிச் செல்லப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 11:23 pm IST

பெரம்பலூா்: பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒன்றரை பவுன் நகை திருடிச் செல்லப்பட்டது.

பெரம்பலூா் -ஆலம்பாடி சாலையிலுள்ள அன்னை நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் ராமதாஸ் (39). அம்மாபாளையத்திலுள்ள மாமனாா் வீட்டில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, இவா் கடந்த 13- ஆம் தேதி குடும்பத்துடன் சென்றுவிட்டாா்.

இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது. இதையறிந்த ராமதாஸ், வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டுக்குள் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை பவுன் நகை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ராமதாஸ் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.