எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பெரம்பலூரில் தடுப்பூசி போடும் பணி

பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலையில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா

Updated On :16 ஜனவரி 2021, 11:25 pm IST

பெரம்பலூா்: பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலையில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா மேலும் கூறியது:

மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 5,100 தடுப்பூசிகள் வந்துள்ளன. முதல் கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், 2- ஆவது கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் முன்னிலையில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கும், 3-ஆவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கும், 4-ஆவது கட்டமாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, அரசு மருத்துவா் ஒருவா் தடுப்பூசி போட்டுக்கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். நிகழ்வில், அரசுத் தலைமை மருத்துவமனை இருக்கை மருத்துவா் ராஜா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் தா்மராஜ், மாவட்ட மலேரியா அலுவலா் சுப்ரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.