செய்திகள்
நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை
அமாவாசையையொட்டி, பொன்னேரி அருகே நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
அமாவாசையையொட்டி, பொன்னேரி அருகே நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
பொன்னேரி அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் பழைமைவாய்ந்த நூக்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி மாத அமாவாசையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
இதையடுத்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்டு நூக்காளம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

