ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ராமதாஸ் கைது எதிரொலி: 7 பஸ்கள் உடைப்பு, கடைகள் அடைப்பு

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் புதன்கிழமை 5 அரசு பஸ்கள் உள்பட 7 பஸ்கள் மர்மநபர்களால்

Updated On :2 மே 2013, 6:40 am

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் புதன்கிழமை 5 அரசு பஸ்கள் உள்பட 7 பஸ்கள் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டன.

மேலும்  பல இடங்களில் கடைகளும் அடைக்கப்பட்டன.

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

இதனைக் கண்டித்து, புதுச்சேரியை அடுத்த பூர்ணாங்குப்பம் கடலூர் - புதுச்சேரி சாலையில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன.

பஸ்கள் உடைப்பு:  அப்போது அந்த வழியாக சென்ற 4 பஸ்கள், 2 வேன்கள் ஆகியவற்றின்  கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இது குறித்து தகவலறிந்த தவளக்குப்பம் போலீஸார் அங்கு விரைந்து, மறியலில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர்.

இதேபோல, திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோயில், பிள்ளைச்சாவடி பகுதிகளிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே கிருமாம்பாக்கத்தை அடுத்த முள்ளோடை பகுதியில் 3 பஸ்களின் கண்ணாடிகளும் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டன. சேதப்படுத்தப்பட்ட 7 பஸ்களில், 5 அரசு பஸ்கள் ஆகும்.

மரங்கள் சாய்ப்பு: திருக்கனூரை அடுத்த சுத்துக்கேணியிலிருந்து சந்தை புதுக்குப்பம் செல்லும் சாலையின் குறுக்கே பனைமரங்களை வெட்டிப்போட்டு, மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

வில்லியனூரில் தொகுதி பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டதால், வில்லியனூர் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.