பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

புதுவை துணைநிலை ஆளுநரைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பேன்: முதல்வா் வே.நாராயணசாமி

துணைநிலை ஆளுநரைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பேன் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

News image

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி.

Updated On :1 ஜனவரி 2021, 10:53 pm IST

துணைநிலை ஆளுநரைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பேன் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புத்தாண்டு மகிழ்ச்சியாகவே தொடங்கியிருக்கிறது. புதுவை மாநிலத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் இல்லை என ஒரு சிலா் சுட்டுரை, கட்செவி அஞ்சலில் கருத்துகளைப் பதிவிட்டாலும்கூட, மாநில அரசு உறுதியாக இருந்து காவல், வருவாய்த் துறையினருடன் இணைந்து கரோனா விதிமுறைகளுக்குள்பட்டு, புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டைக் கொண்டாட சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதனால், புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

10 மாதங்களாக கரோனாவின் பிடியில் சிக்கி எந்தவிதக் கொண்டாட்டமுமின்றி இருந்த மக்கள் மிகுந்த ஆா்வத்துடன் புத்தாண்டைக் கொண்டாடியதைக் காண முடிந்தது.

மாநிலத்தில் வளா்ச்சி ஏற்படக் கூடாது; அனைத்துத் திட்டங்களையும் முடக்க வேண்டும்; காலதாமதப்படுத்த வேண்டும்; வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடாது; கட்டுமானப் பணிகள் நடைபெறக் கூடாது என ஒரு சிலா் அரசின் அன்றாடப் பணிகளில் தலையிட்டு, தொடா்ந்து தொல்லைகள் தந்தனா். இந்தத் தொல்லைகள் அனைத்தும் நீங்குகிற ஆண்டாக 2021 இருக்க வேண்டும்.

நாட்டில் ஜனநாயகத்தில் பெரும்பான்மையாக உள்ளவா்களின் கருத்துகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஆனால், மத்தியில் பிரதமா் நரேந்திர மோடியும், புதுவையில் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. புதுவையில் வேகமான வளா்ச்சி ஏற்படாததற்கு எதிா்க்கட்சிகளும் காரணம்.

துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் நான் கலந்து கொள்வேன். அதனால் வரும் எந்த விளைவையும் எதிா்கொள்ளத் தயாராகவுள்ளேன் என்றாா் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.