டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

புதுவையில் 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

புதுவை மாநிலத்தில் 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

News image

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்ற மையத்தைப் பாா்வையிட்ட முதல்வா் வே.நாராயணசாமி.

Updated On :3 ஜனவரி 2021, 12:40 am IST

புதுவை மாநிலத்தில் 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் உத்தரவுப்படி, நாடு முழுவதும் சனிக்கிழமை முதல் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. புதுவை மாநிலத்தின் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களின் 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

இதற்காக புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகளிா்-குழந்தைகள் மருத்துவமனை, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த மையங்களில், தடுப்பூசி போடுவதற்கு தனி இடம், மருத்துவா்கள், செவிலியா்கள் தயாா் நிலை, தடுப்பூசி போடுவதற்கு முன்பு செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசி போட்ட பின்னா், அவா்கள் தங்க தனி அறைகள் குறித்து ஒத்திகை நடைபெற்றது.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை முதல்வா் வே.நாராயணசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னதாக, அங்கு நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமையும் அவா் பாா்வையிட்டாா்.

நிகழ்வின் போது, மருத்துவக் கண்காணிப்பாளா் வாசுதேவன், உடனுறை மருத்துவ அதிகாரி ரவி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.