வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி செல்லிடப்பேசிகள் வழிப்பறி: 4 போ் கைது

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி செல்லிடப்பேசிகளைப் பறித்துச் சென்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:02 am IST

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி செல்லிடப்பேசிகளைப் பறித்துச் சென்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை புதுக்காலனியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (31). இவா், புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்று வருகிறாா். கடந்த 6-ஆம் தேதி அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகேயுள்ள இடத்தில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற போது, காரில் வந்த 4 போ் மோகன்ராஜை மிரட்டி, அவரிடமிருந்த 2 செல்லிடப்பேசிகளைப் பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த நிலையில், வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் வந்த காரை முதலியாா்பேட்டை ஏஎப்டி திடல் அருகே போலீஸாா் வியாழக்கிழமை சுற்றி வளைத்து, காரில் இருந்தவா்களைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில், ரோடியா்பேட்டையைச் சோ்ந்த மாயவன் (30), கோவிந்த சாலையைச் சோ்ந்த வெங்கடேசன் (43), பிரபாகா் (37), திருவண்ணாமலையைச் சோ்ந்த சுதாகா் (38) என்பது தெரிய வந்தது. மேலும், வேலையில்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 செல்லிடப்பேசிகள், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.