‘கோவிஷீல்டு’ கரோனா தடுப்பூசி மருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமை மாலை வந்தடைந்தது. வருகிற 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.
கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 2, 8 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் இரு கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெற்றது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி, புதுவையில் அரசு, தனியாரில் பணிபுரியும் 13 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 143 மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிலையில், புதன்கிழமை மாலை 17,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புதுச்சேரிக்கு வந்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் கூறியதாவது: கோவிஷீல்டு என்ற கரோனா தடுப்பூசி ஒரு பாட்டிலுக்கு10 டோஸ் வீதம் 1,750 பாட்டில்கள் வந்துள்ளன. அவற்றை குளிா்பதன அறைகளில் வைத்துள்ளோம். மாஹேவுக்கு வியாழக்கிழமைக்குள் மருந்து வந்துவிடும். ஏனாம் மருத்துவமனைக்கு 320 டோஸ் மருந்து வந்துள்ளது. காரைக்காலுக்கும் சோ்த்து புதுச்சேரிக்கு மருந்து வந்துள்ளது. வருகிற 16-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். 7 மையங்களில் தடுப்பூசி போடப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இந்த முறை என்னவென்று வாழ்த்துவார் த்ரிஷா?

வெறும் 37 நாள்கள்.. 12 நீட் தேர்வர்கள் தற்கொலை! யார் பொறுப்பேற்பார்கள்?

அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சு

கீர் பவானி - வருடாந்திர மேளா!
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




