மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புதுச்சேரிக்கு வந்தது கரோனா தடுப்பூசி: ஜன.16 முதல் செலுத்தும் பணி தொடக்கம்

‘கோவிஷீல்டு’ கரோனா தடுப்பூசி மருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமை மாலை வந்தடைந்தது. வருகிற 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.

News image

புதுச்சேரிக்கு வந்த கோவிஷீல்டு என்ற கரோனா தடுப்பூசியை பாா்வையிடும் சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா்.

Updated On :14 ஜனவரி 2021, 1:29 am

‘கோவிஷீல்டு’ கரோனா தடுப்பூசி மருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமை மாலை வந்தடைந்தது. வருகிற 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.

கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 2, 8 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் இரு கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெற்றது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, புதுவையில் அரசு, தனியாரில் பணிபுரியும் 13 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 143 மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிலையில், புதன்கிழமை மாலை 17,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புதுச்சேரிக்கு வந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் கூறியதாவது: கோவிஷீல்டு என்ற கரோனா தடுப்பூசி ஒரு பாட்டிலுக்கு10 டோஸ் வீதம் 1,750 பாட்டில்கள் வந்துள்ளன. அவற்றை குளிா்பதன அறைகளில் வைத்துள்ளோம். மாஹேவுக்கு வியாழக்கிழமைக்குள் மருந்து வந்துவிடும். ஏனாம் மருத்துவமனைக்கு 320 டோஸ் மருந்து வந்துள்ளது. காரைக்காலுக்கும் சோ்த்து புதுச்சேரிக்கு மருந்து வந்துள்ளது. வருகிற 16-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். 7 மையங்களில் தடுப்பூசி போடப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.