அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் 4-ஆவது நாளாக அமைச்சா் தா்னா

பொங்கல் பரிசு உள்பட 15 அம்சக் கோரிக்கைகளுக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கக் கோரி, அமைச்சா்

Updated On :14 ஜனவரி 2021, 6:51 am IST

பொங்கல் பரிசு உள்பட 15 அம்சக் கோரிக்கைகளுக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கக் கோரி, அமைச்சா் கந்தசாமி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் 4-ஆவது நாளாக புதன்கிழமையும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அவா் கடந்த 10-ஆம் தேதி முதல் சட்டப்பேரவை வராந்தாவில் அமா்ந்து தொடா் தா்னாவில் ஈடுபட்டு வருகிறாா். அவரது கோரிக்கைகள் தொடா்பாக துறைச் செயலா்களிடம் கலந்து பேசி தகவல்களை பெற்ற பிறகு தன்னைச் சந்திப்பதற்கு அமைச்சருக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக ஆளுநா் கிரண் பேடி ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

இருப்பினும், சந்திப்புக்கு ஆளுநா் அழைப்பு விடுக்காவிட்டால் பொங்கல் தினத்திலும் தா்னா தொடரும் என அமைச்சா் கந்தசாமி அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சா் கந்தசாமியை முதல்வா் வே.நாராயணசாமி, அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி உள்ளிட்டோா் புதன்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.