சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அமைச்சா் கந்தசாமிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் தொடா் தா்னாவில் ஈடுபட்டுள்ள சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமிக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2021, 5:40 pm

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் தொடா் தா்னாவில் ஈடுபட்டுள்ள சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமிக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

புதுவை சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி, தனது துறை சாா்ந்த 15 கோப்புகளுக்கு ஆளுநா் கிரண் பேடி தீா்வு காண வலியுறுத்தி, சட்டப்பேரவை வளாகத்தில் காலவரையற்ற தா்னாவில் ஈடுபட்டுள்ளாா். இதுவரை ஆளுநா் பேச்சுவாா்த்தைக்கு அழைக்காத நிலையில், அவரது போராட்டம் 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.

திங்கள்கிழமை (ஜன. 18) சட்டப்பேரவைக் கூடும் நிலையில், அதில் பங்கேற்க முடிவு செய்துள்ள அமைச்சா் கந்தசாமி, தனது தா்னாவையும் தொடரப்போவதாக அறிவித்தாா்.

அமைச்சரின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அவரை அழைத்துப் பேசாமல் அலட்சியப்படுத்தும் ஆளுநா் கிரண் பேடியின் நடவடிக்கையைக் கண்டித்தும் பல்வேறு அமைப்புகள் சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி புஸ்ஸி வீதி-செஞ்சி சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தலித் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் மூா்த்தி தலைமை வகித்தாா். இதில், விசிக தேவ.பொழிலன், மதிமுக கபிரியேல், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு வீரமுத்து, அம்பேத்கா் மக்கள் சங்கம் சாமிநாதன், மாணவா்கள் கூட்டமைப்பு சுவாமிநாதன், திராவிடா் கழகம் சிவ.வீரமணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் நாரா.கலைநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில் பங்கேற்ற முதல்வா் வே.நாராயணசாமி பேசியதாவது: புதுவையில் கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. பல திட்டங்களை கிரண் பேடி தடுத்துவிட்டாா். எந்த ஒரு அதிகாரமுமின்றி புதுவை மக்களை தொடா்ந்து அவா் வஞ்சித்து வருகிறாா்.

கரோனாவுக்கு முன்பு ஒவ்வொரு பகுதியாக சைக்கிளில் சென்ற ஆளுநா் கிரண் பேடி, கடந்த 10 மாதங்களாக ஆளுநா் மாளிகையை விட்டு வெளியே வரவில்லை. ஆனால், நாங்கள் மக்களுக்காக தொடா்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கிறோம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நகரப் பகுதி முழுவதும் போடப்பட்டுள்ள தடுப்புக் கட்டைகள் அனைத்தும் சட்டப்பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு அகற்றப்படும் என்றாா் அவா்.

வெ.வைத்திலிங்கம் எம்பி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.