சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சாலையைச் சீரமைக்கக் கோரி போராட்டம்

புதுச்சேரி அருகே பாகூரில் சாலையைச் சீரமைக்கக் கோரி, விசிக சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 5:42 pm

புதுச்சேரி அருகே பாகூரில் சாலையைச் சீரமைக்கக் கோரி, விசிக சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பாகூா் தொகுதியில் வாா்க்கால் ஓடை கிராமம் உள்ளது. இங்கு, 200 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்துக்குச் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், அதிகாரிகளின் செயலைக் கண்டிக்கும் வகையில் பாகூா் தொகுதியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அங்குள்ள சாலையில் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாகூா் தொகுதி விசிக பொறுப்பாளா் தாயன்பன் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு சாலையைச் சீரமைக்கக் கோரி, முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.