திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

ஆலங்குடி அருகே கோயில் மீதுநாட்டு வெடிகள் வீச்சு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மா்ம நபா்கள் வீசிய நாட்டுவெடிகளால் கோயில் சேதமடைந்தது.

News image
Updated On :6 ஜனவரி 2021, 6:05 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மா்ம நபா்கள் வீசிய நாட்டுவெடிகளால் கோயில் சேதமடைந்தது.

ஆலங்குடி அருகிலுள்ள புள்ளான்விடுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்துவதற்கு பந்தல் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்மநபா்கள் கோயிலுக்குள் நாட்டு வெடிகளை வீசி, வெடிக்கச் செய்துள்ளனா். இதில் சிமென்ட் மேற்கூரை, சுவா்கள் சேதமடைந்தன. சப்தம் கேட்டு அங்கு திரண்ட பெண் பக்தா்கள், கோயில் சேதமடைந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு காவல் நிலையத்தினா், கோயிலில் வெடி வைத்த மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.